Wednesday, May 1, 2024

bhatruhari pulambal

பத்ரகிரியார் புலம்பல்   -   நங்கநல்லூர்  J K  SIVAN   --

நம்பும்படி மட்டும் அல்ல,  நம்ப  முடிந்தால் தான்  ஒரு   விஷயத்தை உண்மை   என்று  ஒப்புக்கொள்ள முடியாது.  நம்ப முடியாத  சில ஆச்சரியங்களும் நடந்திருப்பது தான்  உண்மை.  வடக்கே  ஒரு குப்த  ராஜா,  சன்யாசியாகி  தெற்கே வந்து  பர்த்ருஹரி என்ற அவன் பெயர்  திருவிடைமருதூரில்  மகாலிங்க சுவாமி கோவில் வாசலில் பட்டினத்தாரின் சிஷ்யனாக உட்கார்ந்து  நமக்கு  பத்ரகிரியாராக  இருப்பது உண்மைதானே. நம்ப முடிகிறதா இதை?

ஒரு  மனிதன் எதிர்பார்த்தது,  கனவு கண்டது , எல்லாம்  கை  வராமல்   போனால்  விரக்தி வருகிறது.   பெருத்த ஏமாற்றம்  அவனை   உலுக்கி,  உள்ளிருக்கும்  அறிவை  ஆட்டுவிக்கிறது.  தான்  செய்த  குற்றம் தான்  ஒருவனை கடைசிவரை  முள்ளாய்   குத்தி  குதறி  அவனை அமைதி இழக்கச் செய்கிறது.   இதற்கெல்லாம்  யார் காரணம்?   எது  காரணம்? துன்பம் வரும்போது மட்டும்  கடவுளை நினைக்கச் செய்கிறதே.  அது எது?   ஞானம்  பிறக்க  தியாகம் தேவையாயிருக்கிறதே!

 இதெல்லாம் ஒருவன்   தன்னுள் தானே  நோக்கி  அலசுவதன் வெளிப்பாடு. உள்ளே சுத்தமானால்  வாயில்  வார்த்தை ஞானமாய்  புறப்படுகிறது.   பார்வை  சமமாகிறது . எண்ணம்  தெளிவாகிறது.   ராஜா  சீர் பட்டு விட்டான்!  புரிந்து கொண்டுவிட்டான்  எது தேவை  எது  தேவையல்லாதது,   எது  நிரந்தரம்,   எது  அழிவற்றது,  எதைப் பிடிக்க வேண்டும்,. எதை விடவேண்டும்,  எதில்   நாட்டம்,  எதில்    நோக்கம்,  என்று எல்லாம் தேடல்  உள்ளே  ஆரம்பித்துவிட்டதே    அதுவே பர்த்ருஹரி  என்கிற  பத்திரகிரியார்  புலம்பல்.   ஒவ்வொரு  எழுத்தும் தத்வம்.

"நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற வாழ்வை விட்டு உ ன்
பேரில் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்?

நீர்மேல் காற்று  வண்ண வண்ண குமிழ் களை உண்டாக்கி  கண்ணைப் பறிக்கிறதா. சில வினாடிகளில் உடைந்து நீரோடு காத்து காணாமல் போகிறது. அது தான் உலக வாழ்க்கை.  இதை சாஸ்வதம் என்று நம்பாமல் உன்னை  நம்பி  சரணடைந்து,உன்  கருணை வெள்ளம் என் மேல் எப்போது  பெருக்கெடுக்குமோ?

'அன்பைஉருக்கி, அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடர் அ றுப்ப தெக்காலம்?

எல்லா உயிர்களும் நீயே  என்றுணர்ந்து, அந்த ஞானத்தால்   உன் மேலான அன்பை எல்லா உயிர்கள் மேலும் செலுத்தி  உலக துன்பங்களிலிருந்து விடுபட  பாசம் நேச பந்தங்களை அறுத்து உய்வது எப்போது?

''மனதை ஒரு வில்லாக்கி, வான் பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி, எய்வதினி எக்காலம்?

நான் ஒரு புது அம்பு விடவேண்டும். என் மனது தான் வில். அதில் விண்ணிலே  காணும் உன் மேல் பக்தி தான்  நாண் . எனக்கு நீ அளித்த  அறிவு தான் அம்பு. அது கொண்டு செல்வது தான்  சகல உயிர்கள் மேலும் அன்பு.  என் அம்பு எப்போது செல்லும்?

''அருணப்பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம்?

 இதோ காலையில் சூரியன் உதித்துவிட்டான். ப்ரபஞ்சம் பூரா  அவனுடைய  பொன்னொளியில் குளிக்கிறது. அது போல  உன் கருணை வழங்கும் திருவடியில் நான் முழுதுமாக  என்னை இழந்து சேர்வது எப்போது?

''பொன்னில் பலவிதமாம் பூடணம்உண் டானதுபோல்
உன்னில் பிறந்து உன்னில் ஓடுங்குவதும் எக்காலம்?

தங்கம் ஒன்று தான். அந்த உலோகத்தை  உருக்கி  அடித்து, உருட்டி, வளைத்து, நசுக்கி,  மெருகூட்டி பல வித கண்கவரும் ஆபரணங்களை உருவாக்குவது போல்,  உன்னிலே பிறந்து, உன்னால் வளர்ந்து, உன் வழியே  வாழ்ந்து முடிந்து உன் திருவடியையே  நான் மீண்டும் சேர்வது எப்போது?

''சூரியனின் காந்தஒளி சூழ்ந்துபஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியநின் தோற்றத்து அருள்பெறுவ தெக்காலம்?

சூரியனின் சுடரொளி பஞ்சை நெருங்கி அதை சுட்டெரிப்பது போல, பகவானே, உன் திவ்ய தரிசனம், அருள் பெற்று என்னிடம் உள்ள அகம்பாவம்,  அஞ்ஞானம் எரிந்து மறைவது எப்போது?

''கருக் கொண்ட முட்டை தனை கடல்ஆமை தான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல் உனைஅடைவை தெக்காலம்?

ஆமை  கடலிலிருந்து  கரைக்கு சென்று  பள்ளம் தோண்டி முட்டையிட்டுவிட்டு கடலுக்கு திரும்பிவிடும்.  கடலிலிருந்து  தனது முட்டையை நினைத்து அது தக்க காலத்தில் பொரிந்து அதிலிருந்து ஆமைக்குஞ்சு கடலுக்கு நடந்து வந்து தாயைச் சேறும்.  அது போல் நான் உன்னிலிருந்து வந்தவன். உன்னையேஅடையவேண்டும். அதற்கு உன் சங்கல்பம் எனக்கு எப்போது கிடைக்கும்?

''கடைந்த வெண்ணெய்மோரில் கலவாத வாறதுபோல்
உடைந்து தமியன்உனைக் காண்பதுவும் எக்காலம்

பால் தயாராகி, தயிரைக் கடைந்து மோர் ஆகி,  மோர் மேல் அதிலிருந்து உருவான வெண்ணை மிதக்கிறது. மோரோடு சேர்வதில்லை. நான் உன்னிலிருந்து  உதித்தாலும், மோரிலிருந்து வெண்ணைபோல்  இந்த  உலக பந்தங்கள், மாயையிலிருந்து விலகி, அதோடு சேராமல் உன்னை வந்து அடைவது எப்போது?

Monday, April 29, 2024

Krishna worships what?


courtesy Smt Dr Saroja Ramanujam 
Balakrishna to Geethacharya 2

Now let us look at Krishna after He came to Mathura and then to Dvaraka,.  He showed no miracle in Mathura as his feats except straightening the back of Kubja were all feasible for any strong warrior ( Bheema could have done all that with the same ease) He rather concealed His powers and played the part of a dutiful son and a disciple until he had to pay His gurudhakshiNa by bringing back the son of His guru and later fulfilled the wish of his mother also who wanted to see her sons killed by Kamsa. But even this could be done through yoga siddhi. He was simply showing His valiant nature while in Mathura and when He left for Dvaraka , there we see His divine power in  making Visvakarma build the city and transporting all people in Mathura to Dvaraka overnight.

Then we come across Krishna as a husband. He married Rukmini and others and discharged His duties as a grhastha giving them children and living happily in Dvaraka. But there is an incident in Bhagavtham where His divinity is seen. When Narada came to see how Krishna was managing with so many wives ( as a confirmed bachelor he was  unable to understand perhaps even about managing with one wife!) , Narada saw Krishna in every house engaged in different household functions.

 And finally he saw  Krishna in a hut all by Himself worshipping some thing. Narada was surprised as he knew the real identity of Krishna and could not understand whom He would be worshipping. Then Krishna showed him a vessel in which there was nothing but ordinary street mud. Krishna said that it was the padhadhooli of His devotees. This is the special aspect of the love of Krishna but we shall come to it later.

Brahman is not named

*ब्रह्मणोऽवाच्यत्वे प्रमाणप्रचयः*

*जातिगुणक्रियासंबंधविधुरत्वेन ब्रह्म शब्दनिर्देशयोग्यं न भवतीति भाष्ये तत्र तत्र प्रतिपादितम् | अस्मिन् विषये श्रुतिपुराणादिप्रमाणान्यत्र प्रदर्श्यन्ते |*

*Brahman is beyond name (अवाच्यं), devoid of genus, etc. (जाति, गुण, ... say the Veda and Vedavyasa.*

In several places in the Bhashya, Shankaracharya has stated that Brahman is not in the gamut of being 'named.':

शब्दप्रवृत्तिहेतुजात्यादिधर्मरहितत्वात् । (The factors for 'name' being genus, attribute, action and connection are all absent in Brahman.)

न तज्जात्यादिविशेषणवद्ब्रह्म (Brahman is free of attributes based on genus, etc.)

जात्यादिरहितत्वाच्छान्तम् अत एव अद्वयं च तदित्यर्थः ॥ (Because Brahman is devoid of jAti (genus), etc. it is tranquil.)

In the Bh.Gita Bhashya 13.12 Shankara says:

'गौः' 'अश्वः' इति वा जातितः, 'पचति' 'पठति' इति वा क्रियातः, 'शुक्लः' 'कृष्णः' इति वा गुणतः, 'धनी' 'गोमान्' इति वा सम्बन्धतः । न तु ब्रह्म जातिमत् , अतः न सदादिशब्दवाच्यम् । नापि गुणवत् , येन गुणशब्देन उच्येत, निर्गुणत्वात् । नापि क्रियाशब्दवाच्यं निष्क्रियत्वात् 'निष्कलं निष्क्रियं शान्तम्' (श्वे. उ. ६ । १९) इति श्रुतेः । न च सम्बन्धी, एकत्वात् । अद्वयत्वात् अविषयत्वात् आत्मत्वाच्च न केनचित् शब्देन उच्यते इति युक्तम् ; 'यतो वाचो निवर्तन्ते' (तै. उ. २ । ९ । १) इत्यादिश्रुतिभिश्च ॥ १२ ॥

Translation:
For, every word used for expressing an object, when heard by listeners, makes them understand its meaning through the comprehension of its significance with the help of genus, action, ality and relation; not in any other way, because that is not a matter of experience. To illustrate this: a cow, or a horse, etc. (is comprehended) through genus; cooking or reading, through action; white or black, through quality; a rich person or an owner of cows, through relation. But Brahman does not belong to any genus. Hence it is not expressible by words like 'being' etc.; neither is It possessed of any qualitity with the help of which It could be expressed through qualifying words, for It is free from qualities; nor can It be expressed by a word implying action, It being free from actions-which accords with the Upanisadic text, 'Partless, actionless, calm' (Sv. 6.19). Nor has It any relation, since It is one, non-dual, not an object of the senses, and It is the Self. Therefore it is logical that It cannot be expressed by any word. And this follows from such Upanishadic texts as, 'From which, words turn back' (Tai. 2.4.1), etc. Therefore it is logical that It cannot be expressed by any word. And this follows from such Upanishadic texts as, 'From which, words turn back' (Tai. 2.4.1), etc.

*Kenopanishat*: न तत्र वाग्गच्छति (Words do not contact Brahman)

*Taittiriyopanishat* यतो वाचो निवर्तन्ते.... 'From which, words turn back'

श्रीमद्भागवतपुराणम्/स्कन्धः ९/अध्यायः ८

प्रशान्तमायागुणकर्मलिंगं
*अनामरूपं* सदसद्विमुक्तम् । (Name, forms are not natural to Brahman)

ज्ञानोपदेशाय गृहीतदेहं
नमामहे त्वां पुरुषं पुराणम् ॥ २५ ॥

Verses that say Brahman is 'un-namable - avachyam'

Brahmanda Purana:

यद्गत्वा न निवर्त्तन्ते क्षेत्रज्ञं तु निरञ्जनम् ।
अवाच्यं तदनाख्यानादग्राह्यं वादहेतुभिः ॥ ३,३.१०४ ॥

Brahman is not 'named' because it is beyond words.
Vayupurana also has this verse.

*वराहोपनिषत्* Varahopanishat:


वापि त्रिविधोच्चारणेन तु । तैलधारामिवच्छिन्नं दीर्घघण्टानिनादवत् ॥ ६९॥ अवाच्यं प्रणवस्याग्रं यस्तं वेद स वेदवित् । हस्वं बिन्दुगतं दैर्घ्यं ब्रह्मरन्ध्रगतं...

*जयाख्यसंहिता/पटलः ५ Jayakhya samhita (Pancharatra)*:

अनुभूतं न भूयस्त्वं मया वस्तुं हि शक्ष्य(1)से। [ब्रह्ममो दुरवबोधत्वम्] 5-6 अवाच्ये वर्तते कुत्र वाग् वै संवेदनं विना ।। 23 ।। (1. क्यते C. L.) षण्णां यद्वद्रसानां..

*मैत्रायण्युपनिषत् - Maitrayanyupanishad*:

1. अथ यत्र द्वैतीभूतं विज्ञानं तत्र हि शृणोति पश्यति जिघ्रति रसयति चैव स्पर्शयति सर्वमात्मा जानीतेतियत्राद्वैतीभूतं विज्ञानं कार्यकारणकर्मनिर्मुक्तं निर्वचनमनौपम्यं निरुपाख्यं किं तदवाच्यम् ॥ ७
2. अवाच्योर्ध्वा वा गतिः
 
Narada puranam:

नारदपुराणम्- पूर्वार्धः/अध्यायः ३५

जानन्तिरुवाच
सत्यं सत्यं महाभाग चित्तं भ्रान्तं सुनिश्चितम्
अविद्यानिलयं चित्तं कथं सद्भावमेष्यति ६१
ममेति गदितं यत्तु तदपि भ्रान्तिरिष्यते
अहङ्कारो मनोधर्म आत्मनो न हि पण्डित ६२
पुनश्च कोऽहंमित्युक्तं वेदमाले त्वया तु यत्
मम *जात्यादिशून्यस्य* कथं नाम करोम्यहम् ६३

(*Brahman has no genus, attribute, action, relationship*)

अनौपम्यस्वभावस्य निर्गुणस्य परात्मनः
निरूपस्याप्रमेस्य कथं नाम करोम्यहम् ६४
परं ज्योतिस्स्वरूपस्य परिपूर्णाव्ययात्मनः
अविच्छिन्नस्वभावस्य कथ्यते च कथं क्रिया ६५
स्वप्रकाशात्मनो विप्र नित्यस्य परमात्मनः
अनन्तस्य क्रिया चैव कथं जन्म च कथ्यते ६६
ज्ञानैकवेद्यमजरं परं ब्रह्म सनातनम्
परिपूर्णं परानन्दं तस्मान्नान्यदिह द्विज ६७
तत्त्वमस्यादिवाक्येभ्यो ज्ञानं मोक्षस्य साधनम्
ज्ञाने त्वनाहते सिद्धे सर्वं ब्रह्ममयं भवेत् ६८
एवं प्रबोधितस्तेन वेदमालिर्मुनीश्वर
मुमोद पश्यन्नात्मानमात्मन्येवाच्युतं प्रभुम् ६९
उपाधिरहितं ब्रह्म स्वप्रकाशं निरञ्जनम्
अहमेवेति निश्चित्य परां शान्तिमवाप्तवान् ७०
Brahman is to be realized as free of upadhis, is self-luminous, taintless. This is my true nature.)

इति श्रीबृहन्नारदीयपुराणे पूर्वभागे प्रथमपादे ज्ञाननिरूपणं नाम पञ्चत्रिंशोऽध्यायः३५

Thus Atman/Brahman is said to be beyond sound/word as it is devoid of genus, etc. in the Upanishadic lore, Puranas, etc.

Om Tat Sat

Bhagavati Uma is the impeller of Trimurtis and Devatas - says Swami Shankarananda Saraswati

====================
Bhagavati Uma is the impeller of Trimurtis and Devatas - says Swami Shankarananda Saraswati
====================

As known to all, Bhagavati Uma is revered as Brahma-vidya in the Advaita sampradaya. All our Acharyas, including Bhagavatpada himself, have beheld her very dearly and this love of Advaitacharyas for Uma is glaringly evident in their works. This post aims to share one such example. 

Swami Shankarananda Saraswati ji, the guru of Swami Vidyaranya Mahaswamiji, has enriched the Advaita sampradaya with his tikas on the three prasthanas : Brahma-sutra, Bhagavad-geeta and Upanishads. He has also composed a magnanimous work called Atma-purana which summarizes the Upanishadic teachings in a Puranic style.

The Kaivalyopanishad prescribes the dhyana of Uma-Maheshvara in the context of Sagunopsana. While elaborating on this Saguna dhyana, Swami Shankarananda ji, in his Atma Purana, gives a beautiful description of Bhagavati Uma.  She is described as Brahma-vidya swaroopini,  as the bestower of happiness on all beings including devatas and as giver of Swarga and Moksha.  Interestingly, Shankarananda ji also says that, Brahma-Vishnu-Rudra and the Indra-adi devatas perform their respective functions only by the virtue of Bhagavati's grace. 

उमा भगवती येयं ब्रह्मविद्येति कीर्तिता। 
रूपयौवनसंपन्ना वधुर्भूत्वाऽत्र सा स्थिता॥११३६॥

यस्याः प्रसादतः सर्वः स्वर्गं मोक्षं च गच्छति।
इह लोके सुखं तद्वज्जन्तुर्देवादिकोऽपि वा ॥११३८॥

ब्रह्मा विष्णुस्तथा रुद्रः शक्राद्याः सर्वदेवताः।
कटाक्षपाततो यस्या भवन्ति न भवन्ति च ॥ ११३९ ॥ 

~ पूज्यपाद श्री शङ्करानन्द सरस्वती, आत्म पुराण, ११ अध्याय

[In this Saguna vigrah of Parameshvara, Bhagavati Uma, who is known as the Brahma-vidya, endowed with youth and beauty, is stationed as the consort of Parameshvara]

[All beings attain swarga or moksha only by her grace. The happiness that the devatas or creatures get in this world is only due to her]

[Brahma, Vishnu, Rudra, Indra and all other devatas, perform their functions only by the virtue of Bhagavati's gracious glance and fail to do their duties without it]

Entire Ramayana recitation by Brahmasri Harisitaramurti Ghanapadigal

Pitru karma upanyasam Musiri Yagnya rama fikahitar

श्री भद्र वाक्:
முசிறி *யக்ஞராம தீக்‌ஷிதர்* அவர்கள் *பித்ரு கர்மா* என்ற தலைப்பில் செய்த உபன்யாசம்- *2019 ல்* வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது. ஒவ்வொரு பகுதியும் *பத்து நிமிட நேரத்தை* கொண்ட உபன்யாசம்.

*பகுதி 1:* ஜீவன் இறந்தவுடன் எங்கு செல்கிறது, அது நல் கதி அடைய  நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய *கருட புராணத்தின்* அறிமுகம்.

*பகுதி 2*: கருட புராணம் இரண்டு பகுதி. முதல் பகுதி என்பது ஆசார காண்டம், 2-ம் பகுதி உத்தர காண்டம் ( ஜீவனின் கதாகதி)

*பகுதி 3*: ஒருவருடைய ஆயுளை தீர்மானிப்பது எது? *கருடன் - பகவான் சம்பாஷனை*.

*பகுதி 4*: கருட பகவானின் கேள்விகளும் பகவானின் விளக்கங்களும். உடலில் உள்ள ஜந்து விதமான பிராணனின் முடிச்சும் ஜீவன் பிரியும்போது  அதன் சேர்க்கையும்.

*பகுதி 5*: ஜீவன் பிரிந்த முதல் நாள் என்ன ஆகிறது ?

*பகுதி 6*: *கல் ஊன்றுவதின் தாத்பர்யமும் , தண்ணீர் வைப்பதன் காரணமும்*. 9 வது நாளிலுருந்து செய்வது என்பது எந்த விதத்திலும் சரியல்ல. தினமும் செய்ய வேண்டும் நித்திவதி. ஒவ்வொரு நாளும் வளரும் அங்கங்கள்.*பத்து அன்று செய்ய வேண்டியது.*

*பகுதி 7*: இந்த பத்து நாளில் கோத்திரகாரர்கள் ஸ்னானம் மற்றும் சந்தி தவிர மற்ற காரியங்கள் தவிர்த்தல் அவசியம். *கருட புராணம் கேட்பது நல்லது.* 11 ம் நாள் செய்ய வேண்டிய *முக்யமான கார்யம் விசோசர்ஜனம்.*

*பகுதி 8 :*  *11ம் நாள் அன்று 2 வயதுள்ள காளைக்கு ரிஷப பூஜை செய்ய வேண்டும்*. ஜீவனிடம் உள்ள பிரேதம் அந்த காளையுடன் சென்று விடும். *பிரேத சரிரம் விடுபட வேண்டியது அவசியம்* ஜீவன் நல்கதி அடைய. எனவே இந்த மிக அவசியமான கர்மாவை கர்த்தாவானவர் கண்டிப்பாக செய்ய வேண்டும்.  12 ம் நாள் *சபிண்டிகரணம்* அவசியம். இன்றுதான் பித்ருக்களுடன் ஜீவன் சேர்க்கப்படுகிறார்.

*பகுதி 9* : உடல் உறுப்பு தானங்கள் பற்றிய விவகாரம்.

*பகுதி 10*: ஏகோதிஷ்டம் மற்றும் பார்வண சிரார்த்தம் விளக்கம்.

*பகுதி 11*: ஸ்ரார்த்த தினம் தீர்மானம் செய்யும் முறை.

*பகுதி 12* : ஸ்ரார்த்தம் செய்வதனால் ஏற்ப்படும் பலன்கள்

*பகுதி 13* : ஸ்ரார்த்த காலம் . ஜீவனை மட்டும் உத்தேசித்து இறந்த நாளிலிருந்து - 12 ம் நாள் வரை 100 ஸ்ரார்த்தம் செய்யப்படுகிறது. நாம் செய்கிறோம் ஆனால் அறிவதில்லை. மாத்யானிக காலத்திற்க்கு முன்னவே இந்த ஸ்ரார்த்தம் செய்யப்படவேண்டும்.

*பகுதி 14*: ஸ்ரார்ததில் கண்டிப்பாக இருக்க வேண்டிய 7 வஸ்துக்களும் பொருள்களும்.

*பகுதி 15-16:* ஸ்ரார்த்தம் செய்யும்போது *எப்படி பித்ருக்கள் வருகிறார்கள்* என்பதை பற்றிய சரித்திரம் .

*பகுதி 17-19* : ஸ்ரார்த்தின் பிரதான அம்சங்கள்- *ஹோமம், பிராமண போஜனம்* மற்றும் *பிண்ட பிரதானம்*.

*பகுதி 20*: பிண்ட பிரதானமும் அதன் தாத்பர்யமும். *பிண்ட பிரதானம் செய்யும் அன்னம் ஏன் சூடாக  இருக்க வேண்டும்*?.

*பகுதி 21* : பித்ரு நமஸ்காரத்தின் மூலமாக நாம் செய்யும் பிரார்த்தனை மந்திரத்தின் அர்த்தம்.

*பகுதி 22-24* : ஸ்ரார்த்ததின் மூன்று வகை

*பகுதி 25-29*: பீஷ்ம சரித்திரமும் அவருக்கு பித்ருக்களின் ஆசிர்வாதமும் 

*பகுதி 31-32*: கொள்ளு பேரனின் முக்யத்துவம்

*பகுதி 33- 37*: நாம் கொடுக்கும் அன்னம் எப்படி பித்ருக்களுக்கு போய் சேருகிறது ? அவர்கள் ஏற்கனவே பிறந்திருக்கலாம் - அவர்களுக்கு எப்படி சேருகிறது. 3 தலை முறை மட்டும் வருகிறார்களா மற்றவர்களும் வருவார்களா ?

*பகுதி 38* : நாம் கொடுக்கும் பிண்டம் யார் யாருக்கு எப்படி போய் சேருகிறது என்பதை பற்றிய விளக்கம்.

*பகுதி 39* : கர்தாவின் மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்?

*பகுதி 40-42*: ஸ்ரார்த்த பிராமணர்களை அழைக்கும் முறை , ஸ்ரார்த்த போஜனம் செய்யும் பிராமணர்கள் கடைபிடிக்க வேண்டிய நியமங்களை பற்றிய விளக்கம் .

*பகுதி 43-50* : ஏன் சில பேர் பிரேத சரிரத்துடன் இருக்கிறார்கள் என்பதை பற்றிய விளக்கமும் இந்த சரித்திரத்தை கேட்பதால் விளையும் பலன்களும்.

*பகுதி 51*: ஸ்ரார்த்தம் அன்று கர்த்தா இருக்க வேண்டிய நியமம், திரவிய ( பணம் ) சுத்தத்தின் அவசியம். இல்லை என்றால் நாம் செய்யும் ஸ்ரார்த்த பலன்  செல்லும் இடம் அதனால் பலன் அடைபவர்கள் பற்றிய விளக்கம் .

*பகுதி 52-54* : ஸ்ரார்த்திற்க்கு சாப்பிட வரும் பிராமணர்கள் கடைபிடிக்க வேண்டியவை மற்றும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மந்திரங்கள். சாப்பிடும் முறை .

*பகுதி 55:* கர்மங்களின் அவசியம்

*பகுதி 56:* ஸ்ரார்ததிற்க்கு  தேவையான சாமான்கள். *இரும்பு, எவர்சில்வர் கூடவே கூடாது.* பச்சை தர்பையில் அமிர்தம் உள்ளது.

*பகுதி 57*:  எள்ளின் முக்கியத்துவம். எந்த வகை எள்ளை (கறுப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு எள்) உபயோகபடுத்த வேண்டும் என்பதை பற்றிய விளக்கம். பச்சை அரிசியை பயன்படுத்த வேண்டிய அவசியம்.

*பகுதி 58-65*: எள்ளின் அவசியத்தை பற்றிய *தட்ச-யக்ய சரித்திரம்*

*பகுதி 80 -90* - ஸ்ரார்த்தம் மந்திரத்தின் அர்த்தங்கள்.

*பகுதி 90*
சபிண்டிகரணத்தினரபோது வரும் 12- சிரவணர்களும் அதன் தாத்பரியமும்

*பகுதி 92* : *துவாதச சிரவணர்கள்தான்* யம சபையில் ஜீவனின் புண்ய பாப லிஸ்ட்டை சொல்பவர்கள். எனவே *சரம ஸ்லோகம்*  சவூண்டிகரணம் அன்று சொல்ல வேண்டும். *விஸ்வே தேவர்கள்* பற்றிய விளக்கம் . இந்த ஜீவனை உத்தேசித்து நாம் செய்யும் அனைத்தையும் ஜீவனிடம் கொண்டு சேர்பவர்கள்.

*பகுதி 93-94*: வராஹ ஸ்வாமி பித்ருக்களை உத்தேசித்து செய்யும் ஸ்ரார்த்தம். எதனால் பித்ருக்கள் எள் , தீர்த்ததில் திருப்தியடைகிறார்கள் என்பதை பற்றிய விளக்கம்.

https://drive.google.com/drive/folders/10YhNgiTSAVB7gEY0rADEJgCdR2wcaLiM

Sandhyavandana upanyasam by Yagnya Rama Dikshitar

Thursday, April 25, 2024

Ramayana of Hanuman

A story about Hanumanji. 
When Valmiki completed his Ramayana, Narada wasn't impressed. 'It is good, but Hanuman's is better', he said.

'Hanuman has written the Ramayana too!', Valmiki didn't like this at all, and wondered whose Ramayana was better.

So he set out to find Hanuman.

In Kadali-vana, grove of plantains, he found Ramayana inscribed on seven broad leaves of a banana tree.

He read it and found it to be perfect. The most exquisite choice of grammar and vocabulary, metre and melody. He couldn't help himself. He started to cry.

'Is it so bad?' asked Hanuman..

'No, it is so good', said Valmiki..

'Then why are you crying?' asked Hanuman.

'Because after reading your Ramayana no one will read my Ramayana,' replied Valmiki.

Hearing this Hanuman simply tore up the seven banana leaves stating 
"Now no one will ever read Hanuman's Ramayana.'"

Valmiki was shocked to see this action of Hanuman and asked him why he did this, Hanuman said, 'You need your Ramayana more than I need mine. 

You wrote your Ramayana so that the world remembers Valmiki; 
I wrote my Ramayana so that I remember Ram.'

At that moment he realized how he had been consumed by the desire for validation through his work.

He had not used the work to liberate himself from the fear of invalidation.

He had not appreciated the essence of Ram's tale to unknot his mind.

His Ramayana was a product of ambition; 
but 
Hanuman's Ramayana was a product of pure devotion & affection.

That's why Hanuman's Ramayana sounded so much better. 

That is when Valmiki realized that "Greater than Ram .... is the name of Ram!" 

There are people like Hanuman who don't want to be famous. They just do their jobs and fulfill their purpose.

There are many unsung "Hanumans" in our life too, our spouse, mother, father, friends, let's remember them and be grateful to all.

In this world, where everyone is highlighting his work and seeking validation, let us just do our karma because he who matters, the almighty God, knows without telling him and in the end, it is actually just he who matters.

Remembering 5 pativratas in the morning

ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களைப் பார்த்து,

"அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ"

என்ற சுலோகத்தைச் சொன்னார். 

பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும்  தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.

"சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை,  தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர்கள். 

ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழைந்த பிரம்மதேவர்,  தமது கற்பனையை எல்லாம் திரட்டி, அகல்யாவை உருவாக்கினார். 

அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி  செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் திரௌபதி.

 ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா  தேவியைக் கண்டெடுத்தார். 

பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள். 

பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா  என்னும் அப்சரஸ் பெண்ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும் அழகிய பெண்ணாக மாற்றினார்!" என்று கூறினார்  வேத வியாசர்.

"இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?" என்று கேட்டார்கள் சீடர்கள்.

அதற்கு வேத வியாசர், "இந்த ஐவருமே தங்கள் வாழ்வில்  பேரிழப்புகளையும் பெருந்துயரங்களையும் சந்தித்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற்றி கண்டவர்கள். 

தன் கணவர் கௌதமர் தந்த  சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோடும் மனவுறுதியோடும் இருந்த அகல்யாவை, ராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய  பெண்ணாய் ஆக்கினான். 

கௌரவர்களின் சபையில் பெரும் அவமானத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதியுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து,  பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள்.

 பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக்கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ராமன்  வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை.

 வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத் துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள். 

ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது  கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள் 

எனவே இந்த ஐவரும் காலையில் தியானிக்கத்  தக்கவர்கள்!" என்று கூறினார்.

அப்போது சீடர்கள், "சுவாமி! இந்த ஐவருள் மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா? 

இந்திரனின்  ஆசைக்கு இணங்கினாள் அகல்யா. 
ஐந்து ஆண்களை மணந்தாள் திரௌபதி. 
வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவனை மணந்தாள் தாரை. 
மண்டோதரி  நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள். 

இந்த நால்வரும் எப்படி சீதைக்குச் சமமானவர்களாக ஆக  முடியும்?" என்று வியாசரிடம் கேட்டார்கள்.

அதற்கு வியாசர், "அதற்குத் திருமாலின் திருவருளே காரணம். 

ராமனின் பாதுகையில் உள்ள மண்  அகல்யாவின் மீது பட்ட மாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள். 

திரௌபதி  எப்போதும் கண்ணனையே தியானித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள். 

ராம தரிசனத்தால் தாரையும்  மண்டோதரியும் தூய்மை பெற்றார்கள். 

இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி ஆகிய நால்வரும்  மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்றப்படுகிறார்கள்!" என்றார்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல், சாதாரண மனிதர்களைக் கூடத் தனது  சம்பந்தத்தாலே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் 'சிஷ்டக்ருத்' (உயர்ந்தவர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்படுகிறார். 

உயர்ந்த  மனிதர்களை 'சிஷ்ட:' என்று சொல்வார்கள். 'க்ருத்' என்றால் உருவாக்குபவர் என்று பொருள். 

'சிஷ்டக்ருத்' என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது  திருநாமம்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூடத் தனது  சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் 'சுசி:' என்றழைக்கப்படுகிறார்.

 'சுசி:' என்றால் தூய்மை என்று பொருள். 

தானும்  தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் 'சுசி:' எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது  திருநாமம்

"சிஷ்டக்ருதே நம:" என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையத் திருமால் அருள்புரிவார்.
"சுசயே நமஹ:" என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.ஹேதவே நமஹ.....!!!

Monday, April 22, 2024

nallan chakravarthy

நாட்டுக்குப் பொல்லான்,நமக்கு நல்லான் !
     🔔🙏🔔🙏🔔🙏🔔🙏🔔🙏🔔🙏

இன்று(22/04/24)சித்திரை ஹஸ்தம் பேரருளாளப் பெருமாள் திருநட்சித்திரம்.அவரால்" நாட்டுக்குப் பொல்லான்,நமக்கு நல்லான்" என்று கொண்டாடப்பட்ட "திருமலை நல்லான் சக்ரவர்த்தி" ஸ்வாமியின் திருநட்சித்திரம்.

ஸ்வாமி தனியன்:

"வந்தே வரதராஜேந மமநல்லான் ஆதி ஸம்ருதம்.
பரமைகாந்தி ஸம்ஸ்ஹாராத் ப்ரக்யாதம் லோகதேசிகம் !"

1.உடையவரின் உந்நத சிஷ்யர்:
      💐🌻🌼🌺🌹🏵🌷💐
திருமலையில் திருவேஙகடவருக்குப் பல கைங்கர்யங்கள் செய்த, திருவேங்கடவரிடம் இருந்து சங்கு சக்கரங்களைப் பெற்ற தொண்டை
மான் சக்ரவர்த்தி குலத்தில்/வம்சத்தில் ,காஞ்சிபுரத்தில் 1050 ஆம் ஆண்டு, அவதரித்தார் வரதாசாரி. இளவயதிலேயே உடையவரைச் சரணடைந்து அவரிடம் சாஸ்திர அர்த்த விசேஷங்களைக் கேட்டு அறிந்தார்.(இவருடைய பிதாமகர்  ஸ்ரீ பிரணதார்த்திஹரர்,ஸ்ரீ ஆளவந்தாரு
டைய சீடர். பிரணதார்த்திஹரருடைய பெரிய பிதாமகர் ஸ்ரீ உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை,ஸ்ரீமந்நாதமுனி
களின் சீடராவர்.நல்லான் சக்ரவர்த்திக்குப் பின்னால் அவர் வம்சத்தில் அவதரித்த ஸ்ரீ அண்ணராய சக்ரவர்த்தி ஸ்ரீ மணவாள மாமுனிகளின் சீடர்.)

உடையவர் நியமித்த 74 சிம்மாசனாதி பதிகளில் இவரும் ஒருவர்.திருமலை சென்று கைங்கர்யங்கள் செய்ததால் திருமலை நல்லான் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்டார்.இவர் திருமலாசார்யர் என்றும் அறியப் பட்டார்.

2.நாட்டுக்குப் பொல்லான்; நமக்கு நல்லான் !
🙏👏👍👌🙏👏👍👌🙏👏👍👌
ஒரு நாள் அவர்  காஞ்சி வேகவதி நதியில் நீராடும்போது, அங்கே ஒரு பிரேதம் மிதந்து வந்து கரையில் ஒதுங்கியது.நீராடிக்கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் வேறு இடத்துக்குச் சென்று விட்டார்கள்.
வரதாசாரி அந்தப் பிரேதத்தின் அருகில் சென்று பார்த்தபோது அப்பிரேதத்தின் தோள்களில் சங்கு,சக்கரம் முத்திரை பொறிக்கப்
பட்டிருப்பதைக் கண்டார். 
ஒரு திருமால் அடியாருடைய பிரேதம் என்று சேவித்து, அந்தச் சரம திருமேனிக்கு  ஸ்ரீசூர்ணபரிபாலமாக முறைப்படி திருமஞ்சனம் செய்து திருமண்காப்பு இட்டு,முறைப்படி ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தார்.

இதைப் பார்த்த ஊர் மக்கள், உயர்ந்த அந்தணர் குலத்தில் பிறந்த இவர்,  என்ன ஜாதி என்று தெரியாத ஒரு அனாதைப் பிரேதத்துக்கு சரமக் கிரியைகள் செய்யலாமா என்று வியந்து, வரதாசாரியை ஊரை விட்டு விலக்கி வைத்தார்கள். ஊராருக்கு அவர் பொல்லாதவன் ஆகி விட்டார்.

வரதாச்சாரி வீட்டில் சிரார்த்தம். எந்த பிராமண வைதிகரும் சிரார்த்தம் நடத்த வரவில்லை .
"வரதராஜா, ஸ்ரீ ரங்கநாதா, திருவேங்கடவா எல்லாம் உன் செயல்,  என் நிலையைப் பார்த்தாயா?' ஒரு வைஷ்ணவனுக்கு  அந்திம சம்ஸ்காரம் செய்வித்ததற்கு இந்த தண்டனையா?" என்று மனமுருக வேண்டினார்.சிறிது நேரம் கழித்து இரண்டு புதிய பிராமணர்கள் அங்கே வந்தார்கள். சாஸ்த்ரோக்தமாக சிரார்த்தம் நடத்திக் கொடுத்த அவர்களுக்குத் தண்டம் சமர்ப்பித்து, கண்ணீர் மல்க நன்றி சொன்னார்.

"தேவரீர்  யார் ? எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று அடியேன் அறியலாமா?" என்று கேட்ட வரதாசாரி யிடம்அவர்கள் "நான் வரதராஜன், காஞ்சிபுரம், நான் வெங்கடேசன் திருமலை''  என்று சொல்லி புன்னகைத்து மறைந்தார்கள் !!

தேவப்பெருமாள் உற்சவத்தை வந்து சேவிக்க முடியாமல்,ஊரை விட்டு விலகி மன வேதனையுடன் இருந்தார்.பெருமாள் புறப்பாட்டின்  போது,பெருமாள் அர்ச்சகர் மூலமாக "அவன் நாட்டுக்குப் பொல்லான்; நமக்கு நல்லான்"  என்று 
அறுதியிட்டு உரைத்தார்.

ஊரார்,நல்லான் சக்கரவர்த்தியின் பெருமையை அறிந்து அவர் திருமாளிகைக்குச் சென்று அவரிடம் தண்டம் சமர்ப்பித்து, கோயிலுக்கு அழைத்து வந்து உரிய மரியாதைகளைச் செய்தார்கள்.

3.நடுக்காட்டில் மழை பொழிந்த காளமேகம் !
🙏🌧🌦⛈🌨🌧🌦⛈🌨🙏
உடையவர் அவருடைய சீடர்கள் சிலருடன்,ஸ்ரீரங்கத்திலிருந்து மேல்கோட்டை செல்லும் வழியில் பல நாட்கள், காடு,மேடு,வயல்வெளிகள் வழியாக நடந்து சென்றார்.எங்கள் கொங்கு நாட்டுப்பக்கம் (இன்றைய சத்தியமங்கலம்-கணக்கம்பாளையம்)
 வரும் போது இரவு நேரம். ஏழு நாட்கள் உணவு ஏதும் இல்லாமல் மிகக் களைப்பாக வந்த அவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்பினர். தூரத்தில் சற்று வெளிச்சம் தெரிய,சீடர்கள் அதை நோக்கிச்  சென்றனர்.  விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள்.சீடர்களைப் பார்த்த வேடுவர்கள்,"சாமிக ! எல்லாம்  எங்கிருந்து வருகிறீர்கள் ?"
என்று கேட்க "ஸ்ரீரங்கத்திலிருந்து வருகிறோம்" என்றார்கள். உடனே வேடுவர்கள் கைகூப்பி  "அங்கு ராமாநுஜர் சாமி எப்படி இருக்கிறார்" என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று "ராமாநுஜரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?" என்று கேட்க அதற்கு வேடுவரின் தலைவன் "நாங்கள் நல்லான் சக்ரவர்த்தி சாமியின் சீடர்கள். அவர்  ராமாநுஜரின் பெருமைகளைச் சொல்லியிருக்கிறார்.  'உய்ய ஒரே வழி உடையவர் திருவடி!" என்று உபதேசம் செய்தார் என்றார்கள்.

வியப்புற்ற சீடர்கள் "இவர் தான் ஸ்ரீராமாநுஜர் " என்று பக்கத்தில் இருந்த ராமாஜரைக் காட்ட அவர்கள் மிக உகந்து, எம்பெருமானாரின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து, அவர்கள் பெற்ற பேற்றை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.
உடையவருக்கும் சீடர்களுக்கும், தேனும்,தினைமாவும் கொடுத்து உபசரித்தார்கள்.நெருப்பை மூட்டி, குளிர் காய வைத்தனர்.புதிய உடைகளைக் கொடுத்தார்கள்.

 உடையவர், அந்த வேடுவர்களின் அன்பில் நெகிழ்ந்து, "ஸ்ரீநல்லான் இதி மேகோஸ்யம் வநமத்யே ப்ரவர்ஷிதி"-- 'ஸ்ரீ நல்லான் என்கிற  காளமேகம் நடுக்காட்டிலும் மழை பொழிகிறதே" என்று கொண்டாடினார்.

4.நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தார்:
       🌨⛈🌦🌧🌨⛈🌦🌧
திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் உதித்த ஆசார்ய ஸ்வாமிகள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள்.--
குறிப்பாக காஞ்சிபுரம்,ஸ்ரீரங்கம்,
உறையூர்,திருவல்லிக்கேணி,திருவிடந்தை,ஸ்ரீபெரும்புதூர் ஆகிய திவ்ய
தேசங்களில்--.

எங்கள் கொங்கு நாட்டில் ஸ்ரீரங்கநாதப்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்து வரும் 'காரமடை' 
(கோவையிலிருந்து 20 கி.மீ) என்னும் ஸ்தலத்திலும் நல்லான் சக்ரவர்த்தி வம்சத்து ஆசார்ய ஸ்வாமிகள்  எழுந்தருளி இருக்கிறார்கள்;
காரமடை ஸ்ரீரங்கநாதர் கோயில் ஸ்தலத்தார்களாக,அரங்கனுக்குக் கைங்கர்யங்கள் செய்து வருகிறார்கள். கொங்கு மண்ணில் வைணவம் வளர்ந்து வருவதில் முக்கியப் பங்கு ஆற்றி வருகிறார்கள்.

இன்று காலை, தாசம்பாளையம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில்,
அடியோங்கள்,காரமடை ஸ்ரீ உ.வே.திருமலை நல்லான் சக்ரவர்த்தி பாலாஜி ஸ்வாமிகளைச் சேவித்து, அவரது அநுக்ரஹம் கிடைக்கப் பெற்றோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும்,அன்றைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராகவும் விளங்கிய ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசாரி நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் தோன்றியவர்.

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.ஸ்ரீபேரருளாளர்.
2,3: ஸ்ரீரங்கநாதப் பெருமாள்,
காரமடை & மாசி மாதத் தேர்.
4.நடுக்காட்டில் காளமேகம் பொழிந்த மழை

Sunday, April 21, 2024

Where is GOD? What is he doing? - Spiritual story

ஒரு  ராஜாவின் கேள்விகள்  --  நங்கநல்லூர்   J K  SIVAN 

 அந்த காலத்தில் எல்லா ராஜாக்களும்  முட்டாள்களல்ல. சுகவாசிகளாக  நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத  அக்ரமக்காரர்களாக இல்லை. சிலர்  சிறந்த  சிந்தனையாளர்கள். தாராள  மனது கொண்டவர்கள். பக்தர்கள். கல்வியறிவு கொண்டவர்கள். பண்புள்ளவர்களாகவும்  இருந்தார்கள். 

ஒரு  ராஜாவுக்கு  மண்டை வெடித்து விடும்போல  ஆகிவிட்டது.   அவன் மண்டையை 3 கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன. தூக்கம் வரவில்லை.  சபையை கூட்டினான். வெகு காலமாக  அவனைத் துளைத்த அந்த 3 கேள்விகளுக்கு  யார்  விடை சரியாக சொல்லப்போகிறீர்கள்?    பண்டிதர்கள் அவன் கேள்விகள் என்ன என்று கேட்டு அறிந்து கொண்டு விடை தேடினார்கள். 
 
முதல் கேள்வி ; ''கடவுள்  எங்கே இருக்கிறார்?
ரெண்டாவது:  ''எந்த பக்கம்  பார்த்துக் கொண்டிருக்கிறார்?'' 
மூன்றாவது :   ''என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்?'' 

''எவனால்  இதற்கு பதில் சொல்ல முடியும்?.  கடவுளே  கூட   தன்னைப்பற்றி  இதற்கெல்லாம் பதில் சொல்ல தயங்குவாரே'
ஒரு முனிவரை  காட்டில் ராஜா பார்த்தான்.  அவரை அரண்மனைக்குள்  அழைத்து வந்து பணிந்து உபசரித்து தன  3 கேள்விகளைத் தொடுத்தான். பதிலை எதிர் பார்த்தான்.

'' ஹே  ராஜா, என்ன கேள்வி இது?  கடவுள்  எங்கே இருக்கிறார் என்று உனக்கே  தெரியுமே, ஏன் யோசிக்கவில்லை?''
''முனிவரே  எனக்குத் தெரிந்தால்  இத்தனை நாள்  என்  மண்டையில் இது கேள்வியாக முளைத்திருக்காதே சுவாமி.''
''வெண்ணை எங்கே இருக்கிறது எதில் இருந்து வருகிறது தெரியுமா உனக்கு?
''ஆஹா  இது தெரியாதா,  பாலிலிருந்து தான் ''
''பாலைப் பார்க்கும்போது  உனக்கு  அதனுள் இருக்கும்  வெண்ணை தெரிகிறதா மகனே?''
''வெண்ணை அதனுள் இருக்கிறது  என்பது மட்டும் தான் தெரியும்.  வெண்ணை கண்ணுக்கு தெரியாதே சுவாமி''
''அதே போல் தான் அப்பா,  கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார், கண்ணுக்குத் தெரிவதில்லை''  புரிகிறதா?
''நன்றாக  விளங்குகிறது சுவாமி ''
''உனது அடுத்த கேள்விக்கு பதில் சொல்லட்டுமா?  கடவுள் எந்த பக்கம்  பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கேட்டாய் அல்லவா?  
''ஆமாம்  குரு நாதா''
''ஒரு விளக்கு கொண்டுவா''
''ராஜா, இந்த விளக்கை உன் பக்கம்  பார்த்து வைத்துக்கொள் ''
விளக்கை  ராஜா  அப்படியே வைத்துக் கொண்டான். 
"விளக்கை இப்போது ஏற்று '' 
 ராஜா  விளக்கை ஏற்றினான். தீபம்  சுடர்விட்டு எரிந்தது.
''ராஜா,  இப்போது நீ சரியாகப் பார்த்து சொல்  இந்த  தீபம்  தனது ஒளியை  எந்தப் பக்கம் பார்த்து வீசுகிறது?''ராஜா  உற்றுப் பார்த்தான்.
................................................'சொல்...தீப ஒளி  எந்தப் பக்கம்  அப்பா வீசுகிறது ?''
''சுவாமி  தனியாக  எந்த ஒரு பக்கமும்  இல்லை,  எல்லாப் பக்கமும்  தான்  ஒளி  வீசுகிறது''
''உன் கேள்விக்கும் அதே விடை. நீயே சொல்லிவிட்டாயே.  பகவானின் அருள் ஒளி எல்லாபக்கமும்  எல்லோருக்கும் சொந்தமானது அப்பனே. எங்கோ எவரோ ஒருத்தருக்கு மட்டும்  அல்ல. அவர் அருள் கடாக்ஷம்  எங்கும் எவருக்கும் உண்டு''
''இப்போது  நீயே  சொல்லு  உன்  மூன்றாவது கேள்விக்கு  விடை தெரிகிறதா?  கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று கேட்டாய் அல்லவா?
''ஆமாம் ''
''இப்போது  ஆன்மீகமாக  சில  கேள்விகளை சந்தேகங்களை  நீ கேட்டு நான் உனக்கு  உபதேசித்துக் கொண்டிருக்கிறேன்.  நான் குரு, நீ  சீடன்.  நாம்  இப்போது இடம் மாற்றிக்  கொள்வோமா?''
''சரி''ராஜா சிம்மாசனத்தை விட்டு இறங்கி  கீழே வந்து அமர்ந்தான்.  அரசனின் சிம்மாசனத்தில் முனிவர் அமர்ந்தார் ''
''ராஜா, இதோ பார் கடவுள் என்ன செய்கிறார் என்று. 
''பெரிய  ராஜாவையே  கீழே இறக்கி சாதாரனனாக்கி விட்டார்.  ஒரு சாதாரண பரதேசியை ராஜா சிம்மாசனத்தில் ஏற்றி விட்டார். 
ஏழை பணக்காரனாகிறான், பணக்காரன் ஏழையாகிறான். அவர்  எதை வேண்டுமானால் சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு அமைத்து  பரிபாலனம்  செய்கிறார். எங்கும் இதையே  சதா சர்வ காலமும் செய்து  சமநிலை அளித்து வருகிறார். 
 புரிந்து கொண்டாயா.  இன்னும்  ஏதாவது சந்தேகமா?
'சுவாமி என்னில் எழுந்த கேள்விகளை என்னில் மறைந்திருந்த பதில் மூலம் தெளிவித்தீர்கள்''
ராஜா மகிழ்ந்தான்.  நாமும்  கடவுளைப் பற்றி  அறிந்து கொள்வோம். முனிவர் மாதிரி நீங்களும்  உங்களுக்கு தெரிந்த  மற்ற ''ராஜா' க்களுக்கும் எடுத்துச்  சொல்லுங்கள். நல்ல விஷயம் நாலு பக்கமும் பரவ  நீங்களும் எனக்கு உதவுங்கள்.

Friday, April 19, 2024

one flower - lotus - many names

சமஸ்கிருதத்தின் தொன்மையை பாருங்கள். ஒரே ஒரு மலருக்கு எத்தனை விதமான பெயர்கள். அது எந்த மலர் என்று யூகிக்க முடிகிறதா ?

पद्म ; Padma; பத்மா
कुमुद ; Kumuda; குமுத
पुष्कर ; Puṣkara ; புஷ்கர
अम्भोजिनी ; Ambhojinī ; அம்போஜினி
पुण्डरीक ; Puṇḍarīka ; புண்டரீகா
उत्पल ; Utpala ; உத்பலா
दलकोमल ; Dalakomala ; தளகோமளா
सरुद्भव ; Sarudbhava ; சருத்பவா
तोयज ; Toyaja ; தோயஜ
मृणालिनी ; Mṛṇālinī ; மிர்னாளினி
नलिनी ; Nalinī ; நளினி
अनीकिनी ; Anīkinī ; அனிகினி
जलजा ; Jalajā ; ஜலஜா
उत्पलिनी ; Utpalinī ; உத்பாலினி
अम्बुरुहिणी; Amburuhiṇī ; அம்புருஹினி
सूक ; Sūka ; சுக
श्रीवास ; Śrīvāsa ; ஸ்ரீவாச
मदनार्णव ; Madanārṇava ; மதனார்னவ
गम्भीर ; Gambhīra ; கம்பீர
वारिज ; Vārija ; வரிஜ
पर्णसि; Parṇasi ; பர்னஸி
नीरज ; Nīraja ; நீரஜ
सहस्रपत्त्र ; Sahasrapattra ; சஹஸ்ரபத்ரா
अम्बुज ; Ambuja ; அம்புஜ
आस्यपत्त्र ; Āsyapattra ; ஆஸ்யபத்ர
शृङ्ग ; Śṛṅga ; ஷ்ருங்க
पाथोज ; Pāthoja ; பாதோஜ
नदीज ; Nadīja ; நதீஜ
सरोजन्मन् ; Sarojanman ; சரோஜன்மன்
उदज ; Udaja ; உதஜா
सरसिरुह ; Sarasiruha ; சரசிருஹா
कुटप ; Kuṭapa ; குடபா
विष्णुपद ; Viṣṇupada ; விஷ்னுபாதா
अरविन्द ; Aravinda ; அரவிந்தா
सरोज ; Saroja ; சரோஜா
सरसिज ; Sarasija ; சரசிஜா
नलिन ; Nalina ; நளினா
जलाह्वय ; Jalāhvaya ; ஜலாஹ்வயா
सरसीज ; Sarasīja சரசிஜா
नीररुह ; Nīraruha ; நீரருஹா
कवार ; Kavāra ; கவார
कमल ; Kamala ; கமல
सलिलजन्मन् ; Salilajanman சலில்கல்ஜன்மன்
अम्भोरुह् ; Ambhoruh அம்போருஹ்
पाथोरुह ; Pāthoruha ; பாதொருஹ
पङ्कज ; Paṅkaja ; பங்கஜ
हिम ; Hima ; ஹீம
सुजल ; Sujala ; சுஜல
कञ्ज ; Kañja ; கண்ஜ
खरदण्ड ; Kharadaṇḍa ; கரதண்ட
अम्भोजन्मन् ; Abhojanman ; அம்போஜன்மன்
पन्ङ्कज ; Panṅkaja ; பன்கஜ
कुव ; Kuva ; குவா
दृशाकाङ्क्ष्य ; Dṛśākāṅkṣya ; திருஸகான்க்‌ஷ்யா
कज ; Kaja ; கஜா
शीतल ; Śītala ; ஷீதலஹ
कान्तार ; Kāntāra ; காந்தார
श्रीपर्ण ; Śrīparṇa; ஸ்ரீபர்ன
जलेजात ; Jalejāta ; ஜலேஜாத
शोभन ; Śobhana ; ஷோபன
पयोरुह ; Payoruha ; பயோருஹ
जलजकुसुम ; Jalajakusuma ; ஜலஜகுசும

देवन ; Devana ; தேவன
सरसीरुह् ; Sarasīruh ;சரசீருஹ
सारस ; Sārasa ; ஸாரஸ
रमाप्रिय ; Ramāpriya ரமாப்ரிய
अम्बुजन्मन् ; Ambujanman ; அம்புஜன்மன்
हिमाह्वय ; Himāhvaya ; ஹிமாஹ்வய
सरोरुह् ; Saroruh ; சரோரு
जलजन्मन् ; Jalajanman ; ஜலஜன்மன்

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Thursday, April 18, 2024

Difference/multiplicity' is an illusion - Srimad Bhagavatam*

*'Difference/multiplicity' is an illusion - Srimad Bhagavatam*

Shri Krishna, while preaching the spiritual philosophy to Uddhava, says, 'Variety is an illusion, from which the aparoksha jnani comes out':

श्रीमद्भागवतपुराणम्/स्कन्धः ११/अध्यायः ११

वैशारद्येक्षयासङ्ग शितया छिन्नसंशयः।
*प्रतिबुद्ध इव स्वप्नान्नानात्वाद्विनिवर्तते* १२।

Just as the one who wakes up from a dream realizes that the objects of his dream are not true, the Self-realized man is freed from the illusion of multiplicity, difference, by Aparoksha jnana.

*एवं जिज्ञासयापोह्य नानात्वभ्रममात्मनि*।
उपारमेत विरजं मनो मय्यर्प्य सर्वगे २१।

Diversity is a self-conceived illusion. Sridhara Swamy's commentary says that the bodies and the outer world are all adhyasa, a superimposition.

The verses also are a paraphrasing of the famous Upanishadic statement: neha nAnAsti kinchana.. *नेह नानास्ति किंचन॥ मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति॥* ..( Brihadaranyaka and kaThopanishad), nAtra kAchana bhidA asti *नात्र काचन भिदाऽस्ति नैवात्र काचन भिदाऽस्त्यत्र भिदामिव मन्यमानः*..... (Nrsimha tapaniya upanishad).

Om Tat Sat

Sringeri wall papers for mobile

Surrender - saranagati

சரணாகதி அப்படிங்கறதுக்கு ஸ்ரீ வைஷ்ணவத்துல ஒரு ஒசந்த இடம் இருக்கு. சரணாகதி பல வகைப்படறது. ஆ்சார்ய முகேன அநுக்ரஹம் ஆகற சரணாகதிக்கு வலு ஜாஸ்தி. ஏன்னா அவர் எந்த ஜீவன் சரணாகதி ப்ராப்த்தமாறதுக்காக அவரிடம் போய் நிக்கறதோ, அந்த ஜீவாத்மாவுக்கு,  பெருமாள் கிட்டே போராடி அதை வாங்கித் தர்றார். சில பேர் ஸ்வயம் ஆ்சார்யாளா இருப்பா. 

ஆபத் சரணாகதின்னு ஒரு வகை உண்டு. வாழற காலம் முழுக்க ஒரு ஆ்சார்யனை ஆச்ரயித்து சரணாகதி பண்ணிக்கனும்னு தோணலேன்னு வெச்சுப்போம். திடீர்னு உடம்புக்கு முடியாம போயிடறது. தேஹஸ்திதி மோசமாறது. நினைவு நீச்சு இல்லாம போயிடறது. இன்னும் கொஞ்ச நேரம் தான் தாங்கும்னு மருத்துவர்கள் சொல்லிடறா. விஷயம் தெரிஞ்சவா இல்லே ஆத்துக்கு பெரியவா அங்கே இருந்தா மொதல்ல கேக்கற கேள்வி 'ப்ரபத்தி ஆயிடுத்தா?' அப்படிங்கறது தான். சுத்தி வர இருக்கறவா இல்லேன்னு சொன்னாலோ தெரியலேன்னு சொன்னாலோ, முதல் வேலையா ஆசார்யனை தொடர்பு கொண்டு (அது நடு ராத்ரியா இருந்தாலும்) விஷயத்தை சொல்லி, இவாளோட பேர் கோத்ரத்தை எல்லாம் சொல்லி, சரணாகதி அநுக்ரஹம் ஆகப் பண்ணுவா. இப்படி அவசர காலங்கள்ல பண்ற சரணாகதிக்கு பேர் தான் ஆபத் சரணாகதி. எவ்ளோ கருணை அந்தப் பரமனுக்கு. சுய புத்தியோட பிரபத்தி (சரணாகதி) பண்ணிக்கலேன்னா கூட, அவனுக்கும் தன்னோட திருவடி ப்ராப்தமாகி அவன் கரை சேரணும்னு என்னவெல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கான். (Relaxing the rules to the maximum possible  extent).  

அவன் திருவடிகளை அடைஞ்சு திரும்பி இங்கே வந்து விழாம இருக்க சரணாகதி ஒண்ணு தான் மார்க்கம். இதை ராமாயணத்துல ஆரம்பம் முதல் கடைசி வரை ஸேவிக்கலாம். சரணாகதி (ப்ரபத்தி) பண்ணிக்கறதுனால ஏற்படற லாபங்கள் என்னன்னு ராமாயணத்து சரணாகதிகள் மூலமா பாப்போம். 

ஒண்ணு - முதல்ல பாலகாண்டம். இதுல தேவர்கள் எல்லாரும் பெருமாளண்ட சரணாகதின்னு வர்றா. நம்மளால முடியாத ஒண்ணையும் நடத்தித் தர்றவன் அந்த ஸ்ரீமன் நாராயணன். இந்த வாழ்க்கைல நம்மளால ஸ்வதந்த்ரமா செய்யக் கூடியதுன்னு ஏதாவது ஒண்ணு இருக்கா? 

ரெண்டு - அடுத்ததா, த்ரிசங்கு விஷ்வாமித்ரரிடம் சரணடைதல். எப்பேற்பட்டவாளும் சரணடையலாம். அதற்கான ஒசந்த பலனை அடையலாம் அப்டிங்கறதுக்கு இந்த சரணாகதி உதாரணம். இந்தச் சரணாகதியானது த்ரிசங்குவிற்கு தனியா ஒரு ஸ்வர்கத்தையே அநுக்ரஹம் பண்ணித்து. 

மூணு - அயோத்யா காண்டத்தும் போது, இளைய பெருமாளான லக்ஷ்மணன் ராமன் சீதையிடத்தே சரணாகதி அடைந்தது. இது அவனுக்கு அவன் ஆசைப்பட்ட கைங்கர்ய பலனை (வனவாசத்தின் போது) அநுக்ரஹம் பண்ணித்து 

நாலு - பரதனோட சரணாகதி. பெருமாளையே திரும்பி கூப்பிட்டுண்டு வந்து ராஜ்ய பரிபாலனம் பண்ண வைக்கணும்னு சரணாகதி பண்ணின்டான். நடந்தது வேற ஒண்ணு. அவனோட சரணாகதிக்கு எவ்ளோ வலுவு இருந்துதுன்னா, அதுலே எவ்ளோ ஸத்யமும் த்ருடமும் இருந்ததுன்னா, பெருமாள் ராஜ்ய பரிபாலனத்துக்காக திரும்பி வரல்லே. அவன் கேட்டது கிடைக்கல்லே. ஆனா அவன் கேட்டதை விட ஒசத்தியான பாக்யம் அவனுக்கு ஆப்டது. பெருமாளோட பாதுகைகளை தன்னோட சிரஸ்ஸுல ஏந்திண்டு வர பாக்யம். எத்தனைப் பேருக்கு இது ஆப்டும். இது தான் சரணாகதியோட மகிமை. அவனுக்குத் தெரியும் நம்மளுக்கு என்ன தேவை. எது நம்மளுக்கு ஒசத்தின்னு. நம்மளுக்கு தெரியாததும் அவனுக்குத் தெரியும். எப்போ தரணுமோ அப்போ அதை அவன் நமக்கு அநுக்ரஹம் பண்ணுவான். அந்த த்ருடம் நம்மளுக்கு இருக்கணும். அப்படி இருக்கற அந்த த்ருடத்துக்குப் பேர் தான் சரணாகதி. 

அஞ்சு - முனிவர்கள் எல்லாரும் அரக்கர்கள் படுத்தின கொடுமைகள்லேர்ந்து தம்மை ரக்ஷிக்க வேண்டி ஆரண்ய காண்டத்தில் ராமனிடத்தே பண்ணின சரணாகதி. அவன் திருவடிகள்ல "எங்களுக்கு வேறொரு புகல் இல்லை" அப்படின்னு அவா விழுந்தா. அந்த சரணாகத வத்சலன் அரக்கர்களை வதம் பண்ணி அவாளைக் காப்பாத்தினான். "எங்களுக்கு வேறொரு புகல் இல்லை" அப்படின்னு உணர்றதை "அநந்யரக்ஷதை"  அப்படின்னு சொல்லுவா. குழந்தை ஒண்ணு அதோட அம்மாவோட இடுப்புல உக்காந்துண்டிருக்கு. அது அதோட அம்மாவை அழுத்திப் பிடிக்கற அந்தப் பிடிலேர்ந்தே அம்மாவானவள் அந்தக் குழந்தையின் பயத்தைப் புரிஞ்சிப்பா.  "பயப்படாதே. அம்மா இருக்கேன்" அப்படின்னு சொல்ற விதமா தானும் குழந்தையை அழுத்திப் பிடிச்சுப்பா. அவள் தான் இதைப் பிடிச்சுக்கணும் வேறாருமில்லே அப்படின்னு குழந்தை தன்னோட செய்கை மூலமா அவளுக்குக் காட்றதுனால அவளும் அந்தக் குழந்தையை கெட்டியா பிடிச்சுப்பா. இது தான் "அநந்யரக்ஷதை". நாமெல்லாரும் அவனோட குழந்தைகள். அவன் தான் நம்ம எல்லார்க்கும் தாயும் தகப்பனுமானவன். இதை உணர்றது தான் சரணாகதி - ப்ரபத்தி - பரந்யாசம். 

ஆறு - சுக்ரீவன் கிஷ்கிந்தா காண்டத்திலே இளைய பெறுமானாம் லக்ஷ்மணனிடத்தே பண்ணிண்ட சரணாகதி. ராமனிடத்தில் சுக்ரீவன் அபச்சாரப்பட்டுட்டான். அதை உணர்ந்துடறான். லக்ஷ்மணனிடத்தே போய் அபயம்னு சரணாகதி பண்ணின்டுன்றான். ராமனும் அவனை மன்னிச்சு அபயப்ரதானம்  பண்றான். பெருமாளிடம் நேரே சென்று சரணாகதி பண்ணிக்கற அளவுக்கு நம்மளுக்கெல்லாம் ஞானம் இல்லே. சில சமயங்களில் 'பெருமாளண்ட நியம நிஷ்ட்டைகள் தப்பு தப்பா பண்ணி அபச்சார பட்டுடுவமோன்னு பயம் உண்டாறது. அப்போல்லாம் நம்மளை கரை சேக்கற தோணியா ப்ரத்யக்ஷமா நம்மளோட கண்ணு முன்னாலே வர்றது ஆசார்யன் தான். ஆ்சார்ய முகேன பண்ணிக்கற ப்ரபத்திக்கு அவ்ளோ ஏத்தம் உண்டு. அதை அந்த பரமன் பரிபூர்ணமா ஏத்துக்கறான். இதனால தான் பகவானிடம் அபச்சாரப்பட்டாலும்  பாகவதாளிடத்தே அபச்சாரப்படக் கூடாதுன்னுவா. 

ஏழு - சுந்தர காண்டத்தில் திரிசடை தாயாரிடத்தே (சீதாப் பிரட்டி) பண்ணிண்ட சரணாகதி. திரிசடை எவ்ளோ ஒசத்தியானவள் அப்படின்னா, அவள் தாயாரிடத்தே தனக்கு மட்டும் சரணாகதி பண்ணிக்கலை. அங்கே இருந்த அரக்கியர் அனைவருக்கும் சேத்து தான் பண்ணிண்டா. அவள் அப்படி அனைவருக்கும் சேத்து சரணாகதி பண்ணிண்டப்போ கூட, சரணாகதியோட ஒசத்தியை அறியாத அந்த அரக்கிகள், "உம்" கூட கொட்டவில்லையாம். சரணாகதி தங்களுக்கு வேணாம்னு அவா சொல்லாததை கருத்தில் கொண்ட தாயாரானவள், அந்த ஒரு விஷயத்துக்காக எல்லாருக்கும் சேத்து அபயம் அநுக்ரஹம் பண்ணினாளாம். அதனால தான் ஹனுமன் லங்கையையே அக்னிக்கு இரையாக்கினப்போ அந்த அரக்கியருக்கு ஒண்ணும் ஆகலை. தாயாரோட கருணையினால. 

எட்டு - விபீஷண சரணாகதி யுத்த காண்டத்திலே. ரொம்ப ஒசத்தியான சரணாகதி. நம்மளோட ஆசார்யாள் நெறய்ய பேர் விபீஷண சரணாகதியை ரொம்ப ஒசத்தியா கொண்டாடியிருக்கா. சரணாகதியோட லக்ஷணங்கள் என்ன. யார் யாரிடத்தே சரணாகதி அடையலாம் அப்படின்னு ஒரு ஸமுத்ரமா பேசப்படறது விபீஷண சரணாகதி. 

இங்கே நாமோ ஸேவிச்சிருக்க சரணாகதிகள் இந்த எட்டு தான் அப்படின்னாலும், ராமாயணத்துலே இன்னும் நெறய்ய சரணாகதி ப்ரகரணங்கள் (situations) இருக்கு. 

ந்ருசிம்மாவதாரம். ஒரே ஒரு சரணாகதி தான். ப்ரஹ்லாதனோட சரணாகதி.  த்ருடமான, எந்த விதமான ஸம்ஸயங்களும் (doubts) இல்லாத பரிபூர்ணமான சரணாகதி. ஸ்ரீமன் நாராயணன் தான் ஸ
ஶ்ருஷ்டிச்சான். தான் ஶ்ருஷ்டிச்ச எல்லாத்தயும் ஸ்ரீமன் நாராயணன் தான் போஷிக்கறான். திரும்பி நாமெல்லாம் சென்றடைய வேண்டிய இடம் ஸ்ரீமன் நாராயணனோட திருவடிகள் ஒண்ணு மட்டும் தான் அப்டிங்கறதுலே வைராக்யத்தோட நின்னான் ப்ரஹ்லாதன். இந்தத் தெளிஞ்ச ஞானம் தந்த ப்ரஹ்லாதனோட உறுதி அந்த ஸ்ரீமன் நாராயணனை கட்டுண்ணப் பண்ணித்து. மாயம் பண்ணி பெரு மாயவியான அவனையே இழுத்துண்டு வந்தது. வேஷம் போட வெச்சது. திருப்பாற்கடல்ல சாந்த சொரூபியா ஸயனிச்சின்றுக்க அவனை உக்ரம் கொள்ளப் பண்ணித்து. த்வம்சம் பண்ண வெச்சது. அப்போ ப்ரஹ்லாதாழ்வான் பண்ணின சரணாகதி எவ்ளோ ஒசத்தியானதா இருக்கணும். அப்போ சரணாகதிங்கற விஷயம் எவ்ளோ ஒசத்தியானதா இருக்கணும். 

என்னப்பனே ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா... உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து

Saturday, April 13, 2024

crane and fox - Sanskrit nyaya

||ॐ||
"नीतिकथाओं  पर  आधारित  न्यायवचन"(४६)
-------------------------------------------------------
"शृगालेन  शरावे  भोजितो  बकः तं  तुंगपात्रे  भोजयति"।
"सियार  ने  बगुले  को  थाली  मे  भोजन  दिया  और  बगुले  ने  उसे पात्र में "।
------------------------------------------------------------------------------------
(१)
सियार  ने  एक  दिन  बगुले  को  खीर  खाने  अपने  घर  बुलाया।  खीर  विस्तृत  थाली  में  दी  थी  अतः  अपनी  लंबी  नोंकदार  चोंच  से  बगुला  उसका  आस्वाद  नही  ले  पाया ।  वह  भूखा  ही  वापस  घर  आया ।  दूसरे  दिन  उसने  सियार  को  आमरस  खाने  निमंत्रित  किया।  वह  रस  ऊंची  सुराई  में  भरकर  दिया  गया  जिसे  सियार  अपनी  जीभ  से  ठीक  चाट  नही  पाया ।  उसे  भी  भूखा  वापस  लौटना  पड़ा ।
--------------------------------------------------------------------------------
(२)
सीख---
"जैसे  को  तैसा"।
-----------------------------------------------------
卐卐ॐॐ卐卐
-------------------------------
डाॅ. वर्षा  प्रकाश  टोणगांवकर  
पुणे /  महाराष्ट्र    
--------------------------------------

Thiruvanmiyur marundeesvarar temple

சென்னையில் திருவான்மியூரில் வீற்றிருக்கும்...... *நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர்* பற்றி தெரிந்து கொள்வோம்.....

1. மார்க்கண்டேய முனிவரின் உபதேசப்படி வால்மீகி இத்தல ஈசனை வணங்கி வீடுபேறு பெற்றார். அதனால் இத்தலம் திருவான்மியூர் ஆனது.

2. இன்றும் ஆலயத்திற்கு அருகே சாலையோரத்தில் வால்மீகி முனிவரின் சந்நதியைக் காணலாம். இத்தல ஈசனை பால்வண்ணநாதர், மருந்தீஸ்வரர், அமுதீஸ்வரர் என துதிக்கிறார்கள்.

3. பாற்கடல் அமுதத்தால் இத்தல ஈசனை செய்து வழிபட்டதால் அமுதீஸ்வரர் ஆனார். சிவபூஜையில் அலட்சியமாக இருந்த காமதேனு, வசிஷ்டரால் சபிக்கப்பட்டு காட்டுப்பசுவாக மாற, இத்தல ஈசனை வணங்கி பாவ விமோசனம் பெற்றதால் இவர் பால்வண்ணநாதரானார்.

4. வால்மீகி முனிவர் இத்தலம் வந்த போது, அவரைக் கண்டு அஞ்சி ஓடிய காமதேனுவின் கால்குளம்பு ஈசனின் தலையிலும் மார்பிலும் பட்டதாம். அந்த காலடித் தடம் இன்றும் மூலவரின் மீது காணலாம்.

5. இத்தலத்தில் அகத்தியருக்கு நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பற்றி ஈசன் உபதேசம் செய்ததால் மருந்தீசர் ஆனார்.

6. மருந்தீஸ்வரருக்குப் பாலபிஷேகம் செய்து, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய் தீரும்.

7. அன்னையின் அழகுப் பெயர் திரிபுர சுந்தரி.

8. தொண்டை நாட்டிலுள்ள பாடல்பெற்ற 32 திருத்தலங்களில் திருவான்மியூர் 25வது திருத்தலம். திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப் பெற்றது.

9. அப்பய்ய தீட்சிதர் மருந்தீஸ்வரரை தரிசிக்க வந்த போது பெருமழை பொழிந்தது. தீட்சிதரால் சுவாமியின் முதுகுப்புறத்தைதான் தரிசிக்க முடிந்தது. ஈசனிடம் திருமுக தரிசனம் வேண்டி முறையிட, ஈசன் மேற்குப் பக்கம் திரும்பி காட்சி தந்தார்.

10. ஈசன் மேற்கே திரும்பியதால் அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகனும், விநாயகரும் கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள்.

11. தலவிருட்சம் – வன்னிமரம்; தீர்த்தம் – பாபநாசினி குளம். உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்ற கிருஷ்ணர் இந்த தீர்த்தத்தில் நீராடியிருக்கிறார்.

12. இந்த வன்னிமரத்தடியில், அகத்தியருக்கு ஈசன் தனது திருமண கோலத்தைக் காட்டியருளினார். மார்க்கண்டேயருக்கும் ஈசன் இங்கே காட்சியருளினார். அரனின் அருளால் இத்தலத்தில் ஜென்மநாசினி, காமநாசினி, பாபநாசினி, ஞானதாயினி, மோட்சதாயினி என ஐந்து தீர்த்தங்கள் உருவாயின.

13. பிரம்மா இங்கு நகரம் அமைத்து ஈசனுக்கு விழா கொண்டாடியதால் பிரம்மனின் பெயரால் இங்கு பிரம்ம தீர்த்தமும் உள்ளது.

14. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமான இதற்கு சோழ, பல்லவ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள்.

15. கோயில் வளாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றையும் குறிக்கும் மூன்று விநாயகர்கள் அருள்கிறார்கள். இவர்களை வணங்க நம் முன்னோர்களின் ஆன்மா நற்கதி அடையும்.

16. உள்பிராகாரத்தில் கஜலட்சுமி, வீரபாகு, அருணகிரிநாதர் உடனிருக்க வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி அருள்கிறார். 108 லிங்கங்கள் வரிசையாக அருள்பாலிப்பது விசேஷம்.

17.அன்னை சந்நதி முன்னே உள்ள கல் மண்டபத்தில் நடனமாடும் தியாகராஜர் ஓய்வு எடுப்பாராம்.

18. அன்னையின் மண்டப விதானத்தில் அஷ்ட லட்சுமி சக்கரம் உள்ளது. இங்கு நின்று வேண்டிக்கொள்ள, செல்வம் பெருகும்.

19 ஆலய தூணில் சரபேஸ்வரர் அருள்கிறார். இவரை வணங்க எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். இன்னொரு தூணில் முருகன் மீசையுடன் காட்சியளிப்பது வித்தியாசமானது.

20. சென்னை, திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது இக்கோயில்.

தெரிந்து கொள்வோம்......

🙏🙏🙏🙏🙏

Guhagita with English commentary

Courtesy: Sri. P. R. Kannan

The book GUHAGITA in Samskrit, setting out the Upadesa of Sri Subrahmanya on Brahmavidya, together with my commentary in English, has been published in the Kamakoti website. There are also supplements on Kumara Upanishad and a Stotra.

All Sanskrit magazines archive

Now read all the Sanskrit magazines of their open-source latest editions. Collection by @ramdootah

Sraaddham - do's

*ஸ்ரார்த்த விதிமுறைகள் தொடர்ச்சி*

*#சில_குறிப்புகள்*

1.சிராத்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் (சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட) அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது.

2.சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.

3 .வீட்டில் சமையல் செய்து சிராத்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி தளிகை செய்வது உத்தமம்.

4.ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

5.சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம்.

திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் தளிகை ருசியாக சமாராதனை ரூபத்தில் தயாரித்தால் தவறில்லை.

6.அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது.

7.மொத்தத்தில் தளிகை நன்கு சாப்பிடும்படியாக இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.

8.தயாரிக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும்.

9.தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.

10.தளிகை செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம்.

11.தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சந்தோஷப்படுத்தியவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம்.

12.பதார்த்தங்களை அவர்கள் சமீபம் கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது;

இந்த வடை சூடாக உள்ளது; இன்னுமொன்று போட்டுக்கோங்கோ என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். (அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது).

13.தளிகையில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.

14.கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

15.ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

16.ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.

17.தளிகை ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களிடம் வாய் தவறியும் கேட்கக் கூடாது.

18.கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று. ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்தி தரக் கூடியது (எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடுக்கக் கூடாது)

19.பழத்தைத் தவிர மற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது.

20.உப்பை தனியாக பரிமாறக் கூடாது.

21.ஸ்ராத்ததன்று காலையில் சிராத்தம் முடியும் வரயில் கர்த்தாவும் அவரது துணைவியாரும் எதுவும் சாப்பிடக் கூடாது.

22.அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு.

23.மிக அவசியமெனில், திரவமாக சிறிது உணவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

24.மாத்யாஹ்னிகம் செய்த பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம்.
க்ருஸரம் கொடுப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை (2-வது ஸ்நானம்) பிறகு தான் செய்ய வேண்டும்.

25.ஸ்ரார்த்தம் அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.

26.அபிச்ரவணம் சொல்பவர் கிடைக்காவிட்டால், தானே இதிகாச புராணங்கள் பாசுரமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.

27.ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலியவை கூடாது.

28.சிராத்தம் ஆரம்பித்து, அவர்கள் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரையில் கர்த்தா, அந்த ப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.

29.இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

30.மடிசார் புடவை, கட்டிக்கொண்டு ஸ்ரார்த்தம்  பண்ணுவது மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.

31.தினசரி செய்யும் ஆத்து பூஜையை சிராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.

*#ஸ்ரார்த்தத்தை_நம்_விருப்பத்திற்குத்_தள்ளிப்_போடக்_கூடாது*.

ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் சிராத்தம் செய்யலாம்.

கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால்,

அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய வேண்டும்.

ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒருவேளை சிராத்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால்,

பிறரை விட்டு (மகனாக இருந்தாலும் தோஷமில்லை) ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.

கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும் சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது.

கயாவில் ஒரு தடவை சிராத்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி சிராத்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது.

*#இது_சுத்த_அபத்தம்*.

*#சாஸ்த்திர_விரோதமானது*.

ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்த விலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து (பெரிய நக்ஷத்ரஓட்டலாகவும் அது இருக்கலாம்) சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா?

கயா சிராத்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

*#ஔபாஸன_அக்னி*

ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும்.

ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை.

ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக சிராத்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வாய்ப்புள்ளது

கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் (ஹோமத்துடன்) செய்ய வேண்டும்

(பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு பதிலாக ஸமிதாதானம் சொல்லப்பட்டுள்ளது).

*#நம்பிக்கை*

அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி சிராத்தம் செய்வதுதான் முறை.

ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்திரபடியாவது சிராத்தம் செய்யலாம்.

*#கர்மாவை_விடக்கூடாது*.

அதே மாதிரி வாத்யார்களை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது.

நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.

*#சம்பாவனை*

ஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம்.

அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புறியும், இது எவ்வளவு அபத்தமென்று.

சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா?

அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்பாவனை அளிப்பது உசிதம்

வாதயாரை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

*#சாப்பிடும்_ப்ராம்ஹணாள்*

எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு வரக்கூடாது.

நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே!

நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்தானே!

ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா?

அப்படிஇருக்கும்போதுமற்றவர்களைகுறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு?

ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான்.

அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

*#வைதீகம்*

வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும் அதற்க்கு பண்ணிவைக்கும் வாத்யார்மீது நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி.

வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக முக்கியமான மந்திரங்களையாவது நாம் ஒவ்வொருவரும் அத்யாயனம் செய்ய வேண்டும்.

கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பட்டு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும்.

ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம்.

குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது.

கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால், நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

*#பித்ரு_தோஷம்_இல்லாமல்_இருக்க_நாம்_அனைவரும்**#_அவர்களுக்கு_ஸ்ரார்த்தம்_பண்ணுவது_மிகவும்_அவசியம்_பண்ணுங்கள்*

முற்றும்

Madurai Meenakshi temple

*மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெரியும் இவற்றை எல்லாம் தெரியுமா?*

மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி, 

மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா மலயத்துவசன், காஞ்சனமாலை, 

மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது. 

மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார், 

மீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பெயர் பொற்றாமரைக் குளம்,

மீனாட்சி அம்மன் கோயில் விமானத்தின் பெயர் இந்திர விமானம். 

பஞ்ச சபைகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சபையின் பெயர் வெள்ளியம்பல சபை.

 மீனாட்சி அம்மன் கோயிலில் கால் மாறி நடனமாடியவர் நடராஜர். 

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மிகப்பெரிய விநாயகர் பெயர் முக்குறுணி விநாயகர். 

மதுரையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்த நாயன்மார் மூர்த்தி நாயனார்,

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறியவர் நக்கீரர். 

மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள கோபுரங்கள் எத்தனை ? 
14 கோபுரங்கள். மீனாட்சி அம்மன் கோயிலின் மிக உயரமானது தெற்கு கோபுரம்.

 மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புகழ்பெற்ற மண்டபம் எது?
 ஆயிரங்கால் மண்டபம் நவகிரக ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோயில் புதன் ஸ்தலமாகும்.

மீனாட்சி குங்குமத்தில் காந்தம்: 

மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். 

இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள்.

 அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். 

சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார்.

 இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். 

நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். 

இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். 

*அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.*

Wednesday, April 10, 2024

Excerpts from purusha vadam - Balakumaran novel

"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான்  பாலகுமாரன்" அவர்களால் எழுதி வெளிடப்பட்ட    "புருஷவதம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. ( பக்கம் 215 - 217) 

கங்கைக் கரை மிக நுண்ணிய அதிரலைகள் கொண்டது. சூட்சும ரூபத்தில் அங்கே வசிப்பவர்கள் அதிகம். அந்த நதியின் மீது ப்ரேமை வந்தது.

அதை விட்டு ஒருநாள் கூட பிரியாமல், எத்தனை காசு கொடுத்தாலும் கங்கை இல்லாத இடத்துக்குப் போகாமல் கங்கையின் குளுமையில் நடந்து கொண்டே தன் உடம்பையும், மனதையும் ஆற்றிக் கொண்டவர்கள், இறந்து போன பிறகும் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

இந்த உலகம் உடல் ரூபம் கொண்டவர்களது மட்டுமல்ல. உடலில்லாது சூட்சும சரீரம் உடையவர்களும் இங்கே உண்டு. 

அவர்கள் பிரபஞ்சத்தின் வேறு பகுதிக்குப் போகாமல், வாழ்ந்தபோது உண்டான வாசனை விடமுடியாது, எண்ணங்களை அகற்றமுடியாது, மனம் என்பதை விடமுடியாது, ஆசைகளோடு வாழ்ந்திருப்பார்கள். 

ஆசைகளை அனுபவிக்க உடல் வேண்டும், அவர்களிடம் உடல் இல்லை. அவர்களுக்கு கங்கையில் குளிக்க ஆசை. ஆனால் குளிக்க முடியாது. கங்கை நீரைக் குடிக்க ஆசை. ஆனால் குடிக்க முடியாது.

ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை குளித்தும், குடித்தும் பழக்கப்பட்டவர்கள். கங்கா மாதா கீ ஜெய்... என்று கூவி நூறு வயது வாழ்ந்தவர்கள். மேலேயும் போகமுடியாமல், கீழேயும் வரமுடியாமல் தத்தளிப்பார்கள்.

கங்கைக்குப் புதிதாகக் குளிக்க வருபவர்களை அவர்கள் ஆவலோடு பார்த்து ஆசீர்வதிப்பார்கள். தர்ப்பணம் செய் என்று மனதுக்குள் தூண்டுவார்கள். தர்ப்பணம் செய்பவர்களுக்கு அருகே உட்கார்ந்து கொள்வார்கள். யாருக்குத் தர்ப்பணம் என்பதை நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள்.

"விஷ்ணுவே இவன் பெற்றோரின் பொருட்டு இவன் செய்யும் தர்ப்பணத்தை துளசிதளத்தோடு ஏற்றுக் கொண்டு இவன் பெற்றோர்களுக்கு விடுதலை கொடு."

அவர்களும் பிரார்த்திப்பார்கள். ரிஷிகளுக்கும், முனிகளுக்கும், சாதுக்களுக்கும் முழங்கை வழியே தர்ப்பணம் செய்யப்படும்போது அந்தத் தர்ப்பண ஜலத்தை ஆவலாக ஏந்தி அந்த நீரில் ததும்பி இருக்கும் அன்புச் சக்தியைப் பருகுவார்கள்.

மன ஒருமையோடு செய்யப்படும் தர்ப்பணத்தில் அன்புச் சக்தி பொங்கி ததும்பியிருக்கும். அந்த அன்புச் சக்தி அந்த சூட்சும சக்திகளின் மனதை ஒருமைப்படுத்தும். அந்த மன ஒருமை அவர்களை அமைதிப்படுத்தும் அல்லது விடுதலை வாங்கித்தரும்.

உடல் காணாது போவது அதாவது ஒரு விடுதலை என்பது போல மனம் காணாமல் போவதும் ஒரு விடுதலை. அதுவும் ஒருவகை மரணம்.

உடல் இல்லை. ஆனால் உடலால் வாழ்ந்த மனம் இன்னும் இயங்குகிறது. உடம்பு இருப்பது போலவே நினைத்துக் கொண்டு மயங்குகிறது என்பது ஒரு வேதனையான விஷயம். ஒரு தத்தளிப்பு.

சூட்சும வாழ்க்கை, அதாவது பித்ருலோகம் ஒன்றும் நிறைவானது அல்ல. பிரபஞ்சம் பற்றிய அறிவு பித்ருலோகத்தாருக்கு அதிகம் தெரியும்.

உலகமெங்கும் வேகமாய் அலைய முடியும். இன்னொரு சூட்சும சக்தியோடு தொடர்பு இன்னும் வேகமாய் ஏற்படுத்திக் கொள்ள முடியும். சும்மாவும் இருக்க முடியும்.

ஆனால் நிறைய சூட்சும சக்திகள் சும்மா இருப்பதில்லை. பிரபஞ்ச அறிவு ஏற்பட்டு விட்டதால் மனிதர்களை நோக்கிக் கதறுகிறார்கள். 'செய்.. இதைச் செய்... இதைச் செய்ய வேண்டாம்' என்று ஆவேசத்தோடு கதறுகிறார்கள்.

சில மனிதர்களுக்கு உள்ளுணர்வாய் இது புரிகிறது. சிலருக்கு இது புரிவதில்லை. தான் என்கிற கர்வம் மனிதனுக்குச் சொல்லப்படும் காரணங்களின் முதன்மையானது, சூட்சும ரூபங்களைப் புரிந்து கொள்ளுதல் நல்லது என்பதற்காகத்தான்.

கர்வம் உள்ளவருக்கு சூட்சுமமும் தெரியாது, ஸ்தூலமும் தெரியாது. அவர்களுக்கு எதிரே உள்ள மனிதர்கள் பேசுவதும் தெரியாது. தலைக்கு மேலே உள்ள பித்ருக்கள் பேசுவதும் கேட்காது.

(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.) 

நன்றி.
குருவே துணை.

ஹர ஹர கங்கே. ஒம் நமோ நாராயணாய...

Thanks : Vadavalli Ravichandran மற்றும் Swami Hyrudhayanandha

laksha bhojanam- Periyavaa

சங்கராம்ருதம் - 833

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

 ஸ்ரீ பெரியவாளிடம் அபார பக்தி கொண்டிருந்தாள் அந்த ஏழைப் பாட்டி. கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும் சிக்கனமாக வாழ்க்கை நடத்தி வந்தாள். மடி ஆசாரம் இவைகளை மிகவும் சிரத்தையோடு கடைபிடிப்பவள்.
தினமும் ஈஸ்வரரான பெரியவா குடிகொள்ளும் இடத்தை சுத்தம் செய்து கோலம் போடுவதும், தீபம் ஏற்றுவதும் தனக்குக் கிட்டிய பெரும்பாக்யமாக கருதி செய்துக் கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி.

இரண்டு புடவைக்குமேல் அந்த பாட்டியிடம் பொருள் ஒன்றுமில்லை.

ஒரு முறை ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் அரிசிக் குறுணையும், வெல்லத்தையும் மகானுக்கு சமர்பித்துவிட்டு சென்றுவிட்டார். அவற்றை பயனுள்ளதாக விநியோகம் செய்ய வேண்டுமல்லவா! பாட்டிக்கு ஸ்ரீ பெரியவாளின் உத்தரவு கிட்டியது.

"இந்த குறுணையை எடுத்துண்டு போய் காஞ்சிபுரத்திலே உனக்கு கண்ணிலே படற எல்லா எறும்புப் புத்துக்களிலும் கொஞ்சம் கொஞ்சமா போட்டுட்டு வா. அரை ஆழாக்கு வீதமா போடு" என்று மாமுனிவரின் திருவாக்கு.

பாட்டியின் பக்தி சிரத்தை எல்லோரும் அறிந்ததே. காஞ்சிபுரம் முழுவதும் அலைந்து பல எறும்பு புற்றுகளை கண்டு பிடித்து அரிசிக் குறுணையும் வெல்லத்தையும் போட்டுவிட்டு வந்தாள். இதை மிக எளிதாக எழுத முடிகிறதென்றாலும், எறும்பு புற்று என்பது வீட்டில் எப்போதேனும் திடுதிப்பென்று தோன்றி மறையுமேயன்றி நாம் தேடி போனால் லகுவில் தென்படுமென்று சொல்லிவிட முடியாது.

ஸ்ரீ பெரியவாளின் அருளால் பாட்டி இந்த காரியத்தை முடித்து விட்டு வந்தபோது ஒரு பெரிய மாலைப் போல இருந்த திரிநூலையும், ஒரு டின் நிறைய எண்ணையையும் ஸ்ரீ பெரியவா பாட்டியிடம் காட்டி,"திரிநூலை நறுக்கி ஒவ்வொரு கோயிலுக்கா போய், எத்தனை விளக்குக்கு போட முடியுமோ, அத்தனை விளக்குக்கும் போடு. ஒவ்வொரு நாளும் ரெண்டு, மூணு கோயிலுக்குபோய் விளக்கேற்றினாலும் போதும்".

இப்படி ஒரு கட்டளை மறுபடியும் போட்டார்கள். பாட்டிக்கோ இதில் பரம சந்தோஷம். மிக சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயில்களென்று சென்று பரமேஸ்வரரின் கட்டளைப்படி சில நாட்களில் இந்த திருப்பணியை நிறைவேற்றினாள். இந்த செய்தியையும் ஸ்ரீ பெரியவாளிடம் சொன்னதில் பாட்டிக்கு பெருமகிழ்ச்சி.

நடமாடும் தெய்வமான ஸ்ரீ பெரியவாளின் ஒவ்வொரு திரு செயலுக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருந்துள்ளதை அனைவரும் அறிந்திருக்க, பாட்டிக்கு பெரியவா இட்ட இந்த கட்டளைக்கு காரணம் இல்லாமல் போகுமா என்ன!

ஒரு நாள் ஒரு பெரிய பணக்கார மனுஷர் மடத்திற்கு படு ஆடம்பரமாக வந்தார். அவர் வந்த தோரணையும் அமர்களமான அவருடைய அகங்காரத்தை வெளிப்படையாக காட்டுவதாக இருந்தது.

தற்பெருமை மேலோங்கி தொனிக்க "நான் சகஸ்ர போஜனம் செஞ்சிட்டு வந்திருக்கேன். அதோடு லட்சதீபமும் போட்டுருக்கேன்" என்றார்.

ஸ்ரீ பெரியவாளுக்கு இவருடைய அகம்பாவம் தெரியாமல் போகவில்லை போலும். தர்ம கார்யங்கள் செய்துவிட்டு அவைகளை வெளியே பேசி கொள்வதே இரண்டாம் பட்சம் என்பதோடு அதை பெருமையாக சொல்லிக் கொள்வதில் புண்ணிய பலன்கள் வீணாகிவிடுகிறதல்லவா.

இதையே பவ்ய பாவத்தோடு, தாழ்மையோடு ஸ்ரீ பெரியவா திருசெவியில் விழவேண்டுமே என்ற ஆதங்கத்தோடு தெரிவிக்கப்பட்டிருந்தால் அதை அந்த பரம கருணாதயாளன் ஏற்று சிலாகிக்கும் காருண்யமே அலாதியாக இருக்கும்.

அகம்பாவமே மொத்த உருவமாக நின்ற அந்த தனவந்தரிடம் ஸ்ரீ பெரியவா ஏதோ பேச்சை மாற்றி பேசுவது போல ஆரம்பித்தார்.

"இங்கேயும் ஒரு பாட்டியிருக்கா. அந்த அம்மாளும் லட்சபோஜனம் செய்திருக்காள். பல லட்சதீபம் போட்டிருக்கா" என்றார் ஸ்ரீ பெரியவா அந்த பெரிய மனிதரிடம்.

வந்தவருக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது. தான் பெருமையாக சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல் ஸ்ரீ பெரியவா இன்னொரு பாட்டி இதே போல் செய்திருப்பதோ சொல்கிறாரே…அந்த பாட்டி தன்னைவிட ரொம்ப பணக்காரியோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கினார். கூடவே அப்படிப்பட்ட பாட்டி யார் என்பதை அறியும் ஆவலும் மனதில் தோன்றியது.

எதிரே நிற்கும் பக்தரின் மனதை படித்துவிட்ட பெருமான் அந்த பாட்டியை அழைத்து வருமாறு கூறினார்.

"இவள்தான் அந்த உத்தமமான காரியத்தை செய்தவள்" என்று ஏழை பாட்டியை ஸ்ரீ பெரியவா காட்டியபோது தனவந்தர் அயர்ந்து போனார். அழுக்கான கிழிசல் புடவையோடு நின்று கொண்டிருந்த பாட்டியை அந்த பெரிய மனிதர் ஆச்சரியமும் சந்தேகமுமாக நோக்கிக் கொண்டிருக்க, ஸ்ரீ பெரியவா சொல்லத் தொடங்கினார்.

"ஸர்வ ஜீவனிடத்திலும் பகவான் வியாபித்திருக்கார். பிரம்மாவில் ஆரம்பித்து பிபீலிகம் (எறும்பு) வரை பகவான் வாசம் செஞ்சுண்டிருக்கார். மனுஷ்யாளிடத்தும் இருக்கார்.

நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய், ஆனால் இந்த பாட்டியோ பல லட்சம் ஜீவன்களுக்கு ஆகாரம் போட்டிருக்காள்.

ஏதோ ஒரே ஒரு கோயிலுக்கு லட்சதீபம் போட நீ திரவியம் கொடுத்திருப்பே, லட்சம் தீபத்துக்கும் நீயே எண்ணெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்ற உன்னால முடிஞ்சிருக்காது. இந்த பாட்டி பல கோயில்களுக்கு போய் பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தன் கையாலேயே தீபம் ஏற்றியிருக்காள்".

ஸ்ரீ பெரியவா இப்படி சொல்லி முடித்த போது பிரமுகர் தன தவறை உணர்ந்து விட்டவராய் தலை குனிந்து நின்றார். உலகெலாம் காத்து ரட்சிக்கும் கிருபாகரராய் ஸ்ரீ பெரியவா அருள, அந்த நடமாடும் தெய்வத்திடம் நாம் அகந்தை உணர்வோடு தற்பெருமையாக பேசிவிட்டது எத்தனை குற்றமென அவருக்கு உறுத்தியது.

தெளிந்து விட்டவராய் எல்லோரையும் மறைத்துக் கொண்டு நின்றவர் சற்றே விலகி மற்ற பக்தர்களுக்கு வழிவிட்டு நின்றார்.

ஆனாலும் தாயினும் சிறந்த பரிவுடன் ஸ்ரீ பெரியவா உடனே தன்னை உணர்ந்து கொண்ட பக்தரை உடனே அரவணைக்கும் விதமாக, இதமாக உட்கார வைத்து சிறிது நேரம் பேசி பிரசாதங்களையும் கொடுத்தனுப்பினார்.

அடக்கம் கற்றுக் கொண்ட ஆனந்தத்தோடு அந்த பிரமுகருக்கு எந்த கைங்கர்யத்திலும் தனக்கு ஏற்ற தகுதியில் செய்வதோடு சிரத்தை எத்தனை முக்கியமென்பதை பாடமும் புரிந்தது.

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் 
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Thanks: Madambakkam Shankar FB

Sanskrit class

🕉️ *வியாஸ வித்யா மந்திரம்* 
🌹 நமஸ்காரம். 
🌹 பாரதத்தின் பழம்பெரும் பொக்கிஷமான ஸம்ஸ்க்ருத மொழியை எழுத, படிக்க,  பேசக் கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.

🌹 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்ளலாம்.

🌹 முதல்நிலைத் தேர்வு ஆத்யா - 1 க்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

🌹 கீழ்காணும் அனைத்து விவரங்களையும் கவனமாகப் படித்து *GOOGLE FORM* மூலமாக  விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும்.

🌹 பன்னிரெண்டு வயது நிரம்பி இருந்தால் போதுமானது.  அதற்கு மேல் வயது வரம்பு தடை கிடையாது.

🌹 முன்பே ஸம்ஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

🌹 ஒன்பது மாத காலத்திற்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

🌹 தமிழ் வழியில் கற்றுக் கொள்ளலாம்.

🌹 பாடப்புத்தகம் மற்றும் அஞ்சல் தொடர்பு உட்பட இதர செலவுகளுக்கான கட்டணம் ₹500/- மட்டுமே.  
 *(👆மேற்படி தொகையை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விவரங்கள் GOOGLE FORM உள்ளேயே  தரப்பட்டுள்ளன.)* 

🌹 பயிற்சிக்  கட்டணம் கிடையாது. 

🌹 கீழ்க்கண்டபடி தங்களுக்கான வகுப்பு நேரத்தை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

🌹 வார நாட்கள் எனில் வாரத்தில் மூன்று நாட்களிலும் வாரக் கடைசி நாட்கள் எனில் இரு தினங்கள் மட்டும்  வகுப்புகள் நடத்தப்படும்.

 *Batch Timings* 
👉 Tuesday, Wednesday & Thursday Timings
10.00A.M. - 11. 00A.M.        
11.00A.M. - 12.00 NOON
12.00 NOON - 01.00P.M.
01.00P.M. – 02.00P.M.
02.00P.M. – 03.00P.M.
04.00P.M. - 05.00P.M.
04.30P.M. - 05.30 P.M.
06.00P.M. - 07.00P.M.
07.00 PM. - 08.00 P.M.


👉 Saturday & Sunday Timings 
11.30 A.M - 01.00 P.M
04.00 P.M - 05.30 P.M
👆 தாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்திற்கு உட்பட்ட  நேரத்தில் வகுப்பு நடைபெறும்.

🌹 மேற்கூறிய விவரங்களை முழுவதுமாக படித்தபிறகு  GOOGLE FORM-ல் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குத்  தகுந்தபடி  தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களைப் பதிவு செய்து அங்கேயே தரப்பட்டுள்ள விவரப்படி  தேர்வுக்கான தொகை Rs.500/- செலுத்தியதும் தங்களுடைய  மெயிலுக்கு பதிவுக்கான சான்று  வந்து சேரும்.

Google form link.

🌹 Google form பூர்த்தி செய்த  பிறகு 8985569956 என்கிற வாட்ஸ் அப் எண்ணிற்கு பணம் அனுப்பியதற்கான தேதி மற்றும் விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

🌹 நிறைவாக கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுமத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவும்.  வகுப்பு பற்றிய பொதுவான தகவல்கள் அதில் தெரிவிக்கப்படும்.

🌹 உடன் இணைவோம்.  நண்பர்களையும் சகமாணவர்கள் ஆக்கிக்கொள்வோம்.

🌹 மேலும் விவரங்களுக்கு : 
Sri. Ravi   -  6385261753
Sri. Ramji - 9443628831
Sri. Venkatachalam - 9486473425

🌹 இணைந்து கற்போம் 
🌹 இறைவனின் மொழியை.

Dog going with yudhishtira story

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.

யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.

அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.

லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.

பின்தொடர்ந்த நாய்....

மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.

பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், "திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?" எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: "ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை."

சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் "சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். "தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்" என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.

அர்ச்சுனன் வீழ்ந்தான்....

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.

அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். "தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது" என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.

தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் "என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?" என்று கேட்டான். "உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்" என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.

ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.

மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. "நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை" என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். "என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்" என்றான். 

அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். "சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்" என்று கூறி தரும தேவன் மறைந்தார்.

பதிவிட்டவர் : ஜெயந்தி கைலாசம்

varaguna pandiyan Siva kaingaryam - spiritual story

வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒருவர் இருந்தார்

இரவு நேரங்களில் தவளைகள் கத்தும் ஒலி கூட சிவ நாமம் ஆன ஹர ஹர என்பது போல் இருக்கும்

உடனே அவர் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜபிப்பார். 

அந்த அளவுக்கு சிவபக்தி கொண்டிருப்பவர்.

ஒரு முறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் வரகுண பாண்டிய மன்னர்.

ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.

அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.

நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.

அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?

 பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.

மன்னா ! நான் ஒரு சிவபக்தன். 

பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.

 பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன். 

ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.

அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே!

அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.

அவ்வளவு தான்

 வரகுண பாண்டிய மன்னன் அவன் மீது பாய்ந்தார். 

அவனது வாயோரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார்.

இதை பார்த்த அந்தத் எள்ளுத் திருடன் திகைத்தான். 

மன்னா ! ஏன் இப்படி செய்தீர்கள்? .

என் எச்சில் பட்ட எள்ளைத் தின்னலாமா? எனக் கேட்டான்.

அடேய் ! நீ மட்டும் சிவனுக்கு தனியாக செக்கிழுக்க முடியுமா ?

 ஜோடி மாடு வேண்டாமா ? 

அந்த மாடாய் நான் பிறக்கவேண்டும் என்று நான் அப்படி செய்தேன் என்றார் வரகுண பாண்டிய மன்னர்.

திருச்சிற்றம்பலம்!!

ஓம் நமசிவாய 🙏🙏🙏